Last Updated : 07 Sep, 2025 07:33 AM

 

Published : 07 Sep 2025 07:33 AM
Last Updated : 07 Sep 2025 07:33 AM

ப்ரீமியம்
மொழிபெயர்ப்பு முன்னோடி: சரஸ்வதி ராம்நாத்

1986இல் சென்னை திருவல்லிக்கேணியில் பாதையோரப் பழையப் புத்தகக் கடை ஒன்றிலிருந்து சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று ‘ஜெய சோம்நாத்’ என்ற குஜராத்தி நாவல். இது, இந்தி வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

கே.எம்​.​முன்ஷி என்​னும் பெயரை அட்​டை​யில் பார்த்​து​விட்​டுத்​தான் அப்​புத்​தகத்தை வாங்​கினேன். ஜெய சோம்​நாத் நாவலை ஆர்​வ​முடன் ஒரே நாளில் படித்து முடித்​தேன். ஒரு​புறம் கஜினி முகம்​மது​வின் படையெடுப்​பி​னால் சோம​நாத் நகரம் அழி​வுக்​குள்​ளாகிறது. இன்​னொரு​புறம் கோயிலில் நடன​மாடு​வதற்​காக வந்த செளலா என்​னும் நடனக்​காரிக்​கும் அந்த ஊரைச் சேர்ந்த பீம்​தேவ் என்​னும் வீரனுக்​கும் இடை​யில் அரும்​பிய காதலும் அழிந்​து​போகிறது. இரு​வித அழி​வு​களை அரு​கரு​கில் நிறுத்தி இணைத்த நாவலின் கட்​டமைப்பு என்னை மிக​வும் கவர்ந்​தது. ஒரு தமிழ் நாவலைப் படிப்​பது​போலவே நான் அந்த மொழிபெயர்ப்பு நாவலை அன்று படித்து முடித்​தேன். அந்த மொழிபெயர்ப்​பாளரின் பெயர் என் மன​திலேயே நின்​று​விட்​டது. அவர் சரஸ்​வதி ராம்​நாத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x