Published : 27 Aug 2025 06:35 AM
Last Updated : 27 Aug 2025 06:35 AM
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாகிறது என்கிற செய்தியை அறிந்ததும் எனக்குத் தெரிந்த சில இளைஞர்கள் அந்த நூலைப் படிக்க ஆர்வம் கொண்டார்கள். தமிழர்கள்தான் என்றாலும், அவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. அந்த நூலின் ஆங்கில வடிவத்தைப் படிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே அதைப் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தபோது, அவர்களுக்குக் கைகொடுத்தது ஒலி வடிவ நூல் (Audio Book).
இத்தகைய ஒலிவடிவ நூல்கள் மேற்கூறிய இளைஞர்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, பலதரப்பட்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. பார்வைக் குறைவு கொண்டவர்கள், அச்சு எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் கொண்டவர்கள் போன்றவர்களுக்கும் மேற்படி நூல்கள் பெரிதும் ஏற்றவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT