Published : 24 Aug 2025 07:40 AM
Last Updated : 24 Aug 2025 07:40 AM
தமிழில் மறுவாசிப்பு, நவீனத்துவ எழுத்துமுறை, கோட்பாட்டு ஆய்வு என்கிற வகைமைகளில் தவிர்க்க முடியாத ஆளுமை பேராசிரியர் ராஜ் கெளதமன். ஆய்வு, மொழிபெயர்ப்பு, கவிதை, புனைகதை என்று பல வடிவங்களிலும் எழுதியவர். 1980களின் இறுதியில் சிற்றிதழ்களினூடாகக் கோட்பாட்டு விவாதங்கள் மேலெழுந்தபோது அதில் பங்கெடுத்த அவர், பின்னாளில் இலக்கியம், அரசியல், பண்பாட்டு ஆய்வுகளில் புதிய நோக்குகளைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான திறப்புகளை வழங்கியவர்களுள் ஒருவராக அமைந்தார். தமிழ் இலக்கிய ஆய்வுச் சூழலிலும் படைப்புச் சூழலிலும் அடர்த்தியான தாக்கத்தைச் செலுத்திய ராஜ் கெளதமனின் ஆய்வுப் பங்களிப்புகள், இலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பண்பாட்டு வரலாறுகள் மீது வைத்த பார்வை மாறுபட்டதாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT