Published : 22 Jul 2025 06:39 AM
Last Updated : 22 Jul 2025 06:39 AM
ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்காலக் கனவுகளுடன் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மீது காட்டப்படும் ஆர்வம் அனைவரும் அறிந்ததுதான். இந்த வருடம், மாணவர்களின் கவனம் கணினி அறிவியல், மின்னணுவியல் சார்ந்த படிப்புகள் மீது அதிகரித்திருக்கிறது.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடுகளில்கூட, இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பக் கல்விப் போக்கு செல்வதைக் காட்டுகிறது. இந்தப் போக்குகள் தமிழ்நாட்டின் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT