Published : 20 Jul 2025 09:25 AM
Last Updated : 20 Jul 2025 09:25 AM

ப்ரீமியம்
​போரெ​திர்த்த காதை

கடந்த மாதம் கவிஞர் சுகு​மாரன் முகநூலில், “ஒரு யுத்​தத்தை ஆரம்​பிக்க / இரண்​டு​பேர் போதும் / எதிரி​யாக மாறிய நண்​பனும் / நண்​ப​னாக மாறிய எதிரி​யும் / ஒரு யுத்​தத்​தின் முடி​வில் / ஐந்து பேர் எஞ்​சு​வார்​கள் / இறந்​தவன் ஒரு​வன் / சுமப்​பவர் நால்​வர் / ஒரு யுத்​தம் / புதிய சாதி​களை உரு​வாக்​கு​கிறது / அங்​கவீனர்​கள் / அநாதைகள் / கைம்​பெண்​கள் / தரித்​திரர்​கள் / கூடவே / மூடர்​களை / கல்​நெஞ்​சர்​களை” என்ற கவிதையைப் பகிர்ந்​திருந்​தார். போரின் அசல் முகத்​தைச் சில சொற்​களி​லேயே எட்​டி​விட்ட கவிதை​யிது. அந்த இரண்​டு​பேர் ஆரம்​பித்த யுத்​தம் நினைத்​துப் பார்க்க முடி​யாத பேரழி​வு​களை நிகழ்த்​தி​விட்​டுத்​தான் முடிகிறது; சில முடி​யாமல் ஆண்​டுக் கணக்​காகக் கனன்​று​கொண்​டும் இருக்​கிறது. பெரும்​பாலும் இரு நபர்​களுக்கு இடையி​லான ‘தான்’ எனும் அகங்​காரம்​தான் யுத்​தத்​தைத் தொடங்கி வைக்​கக் காரண​மாகிறது. ஆனால் போரின் முடிவு தொடங்​கிய​வர்​களின் கையை​யும் மீறிச் சென்று விடு​கிறது. உதா​ரணம், பாரதப்​போர். யுத்​தம் நடந்த நிலம் பழைய பாதைக்கு மீண்​டும் திரும்​புதல் என்​பது ஒரு கனவைப் போன்​றது​தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x