Published : 03 Jul 2025 06:51 AM
Last Updated : 03 Jul 2025 06:51 AM
இந்தியாவில் 2024இல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உரிமை கோரப்படாத பணம் ரூ.809 கோடி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. அது மட்டுமல்ல, 2024 நிலவரப்படி வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.78,213 கோடி என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. செயலற்ற - செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Dormant and Inoperative Accounts) முடங்கிக் கிடக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்குகள், அஞ்சல் நிலையச் சேமிப்பு, காப்பீட்டுக் கொள்கைகள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றில் எஞ்சியிருக்கும் பணம் என்று ஏறக்குறைய 2 லட்சம் கோடி ரூபாய் இந்திய நிதியமைப்பில் கோரப்படாமல் இருக்கிறது என்பது இன்றைய தேதியில் கசப்பான உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT