Last Updated : 02 Jul, 2025 09:28 AM

 

Published : 02 Jul 2025 09:28 AM
Last Updated : 02 Jul 2025 09:28 AM

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இருக்கிறதா?

சிவ​காசி அருகே சின்​னக்​காமன்​பட்​டி​யில் பட்​டாசு ஆலை ஒன்று வெடித்து சிதறிய​தில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்​கள் 8 பேர் உயி​ரிழந்​துள்​ளதும், மேலும் பலர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வதும் வருத்​தமளிக்​கும் செய்​தி​யாகும்.

பட்​டாசு ஆலைகளில் அடிக்​கடி இது​போன்ற வெடி​விபத்து சம்​பவங்​கள் நடந்​த​தால், அதி​கபட்ச பாது​காப்பு அம்​சங்​களை மத்​திய, மாநில அரசுகளும், நீதி​மன்ற தீர்ப்​பு​களும் பரிந்​துரைத்​துள்​ளன. இவை எல்​லா​வற்​றை​யும் மீறி பட்​டாசு ஆலைகளில் தீவிபத்து நடப்​பதும், தொழிலா​ளர்​கள் உயிரிழப்பதும் தொடர்​கதை​யாக இருந்து வரு​வது அனை​வரை​யும் ஏமாற்​றமடையச் செய்​கிறது. இது​போன்ற விபத்து சம்​பவங்​கள் நடந்​தவுடன் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​திற்​கும், காயமடைந்​தவர்​களுக்​கும் நிவாரணம் அறி​விப்​பதுடன் அரசு தன் கடமையை முடித்​துக் கொள்​வது நல்​லதல்ல.

சிவகாசியில் 8,000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் பொருளா​தார வளர்ச்சிக்​கும்,மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்​சிக்​கும் பெரும் பங்குவகிக்​கும் இந்த பட்​டாசு ஆலைகளின் பாது​காப்பு அம்​சங்​கள் மீது நாம் அக்​கறை செலுத்​தாமல் இருப்பது பொறுப்​பற்ற செயலாகவே அமை​யும். வெடி பொருட்​களை சேகரித்து வைப்​பது, கையாளுதல், தொழிலா​ளர்​களுக்​கானபாது​காப்பு கவச உடைகள், ரசாயனப் பொருட்​களை கையாளுதல், தீயணைப்பு சாதனங்​கள், அவசரகால அணுகு​முறை என ஒவ்​வொரு விஷ​யத்​தி​லும் ஏராள​மான கட்​டுப்​பாடு​களும், விதி​முறை​களும் வகுக்​கப்​பட்​டுள்​ளன.

இவை அனைத்​தையும் பூர்த்தி செய்​யும் நிறு​வனங்​களுக்கு மட்​டுமே பட்​டாசுதயாரிக்க அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இந்த பாது​காப்பு அம்​சங்​கள் அனைத்​தும் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிற​தா? என்​பதை அதி​காரி​கள் அவ்​வப்​போது நேரில் சென்று சரி​பார்க்க வேண்​டும் என்ற விதி​முறை​யும் வகுக்​கப்​பட்​டுள்​ளது. விதி​மீறல் இருப்​பது தெரிந்​தால், உடனடி​யாக அபராதம் விதிப்​ப​தற்​கும், பட்​டாசு ஆலையை மூட உத்தர​விட​வும் அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வளவு கட்​டுப்​பாடு​களை​யும் மீறி தொடர்ந்து பட்​டாசு ஆலைகளில் விபத்து நடக்​கிறதென்​றால், எங்கு தவறு நடக்​கிறது என்று கண்​காணிக்க வேண்​டிய பொறுப்பு அரசுக்​கும்,உயர் அதி​காரி​களுக்​கும் உண்​டு. கடந்த ஆண்டு சிவ​காசி​யில் இதே​போன்று நடந்த பட்​டாசு விபத்​தில் 10 பேர் உயி​ரிழந்​தனர். அப்​போது தேசிய பசுமைத் தீர்ப்​பாய உத்​தர​வின்​பேரில்,மத்​திய மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களைக் கொண்டகுழு பட்​டாசு ஆலைகளில் ஆய்வு நடத்​தி​ய​தில் ஏராள​மான விதி​மீறல்​கள் இருப்​ப​தைக் கண்​டறிந்து அறிக்கை அளித்​தது.

ஆனால், அதன்​மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது என்றவிவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. நாட்​டின் வளர்ச்​சிக்குபங்​களிக்​கும் பட்​டாசு ஆலைகளின் மூலம் கிடைக்​கும் பலனைமட்​டும் அனுப​விப்​ப​தோடு நின்​று​வி​டா​மல், அந்த ஆலைகளில் கூடு​தல் பாது​காப்பு அம்​சங்​களை உரு​வாக்​குதற்கு தேவை​யான உதவி​களை அரசு மேற்​கொள்ள வேண்​டும். இதன்​மூலம், அந்த ஆலைகளில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​களின் பாது​காப்பு மட்​டுமின்​றி, பொது​மக்​களின் பாது​காப்​பும் உறுதி செய்​யப்​படும்; பட்​டாசு தொழில் மேலும் பாது​காப்​பான முறை​யில் வளர்ச்​சி​யடைந்து உயி​ரிழப்​பு​கள் ஏது​மின்​றி நாட்​டின்​ வளர்ச்​சிக்​கும்​ உதவும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x