Last Updated : 17 Jun, 2025 06:44 AM

1  

Published : 17 Jun 2025 06:44 AM
Last Updated : 17 Jun 2025 06:44 AM

ப்ரீமியம்
நுழைவுத் தேர்வுகளின் நோக்கம் வெற்றிபெற்றதா?

உலகின் பல பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, பெரும் மக்கள் கூட்டத்துக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இந்த உரிமை மறுப்பு ஒரு சமூக மரபாகவே தொடர்ந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆசிய - ஆப்ரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்கள், சீர்திருத்தங்களுக்கான கிளர்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் தோன்றிய முற்போக்கு இயக்கங்கள் காரணமாகக் கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட சில உரிமைகள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்தன.

அரசியல் விடுதலை​யடைந்த இந்தியா​வில், குடிமக்​களின் கல்வியறிவு மேம்பட, இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைப்படி, மத்திய / மாநில அரசாங்​கங்கள் பல கொள்கை முடிவுகளை, திட்டங்களை மேற்கொண்டன. அதன் விளைவாகக் கடந்த காலங்​களில், கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்​திருப்பது குறிப்​பிடத்​தக்கது. எனினும், தேசத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்​படியான சில நிகழ்வுப்​போக்​கு​களும் ஏற்பட்​டிருக்​கின்றன. நுழைவுத் தேர்வுகள், கூடுதலான பொதுத் தேர்வுகள் என்னும் பெயரில் வாய்ப்புகள் மறுக்​கப்​படுவதாக எழுந்​திருக்கும் விமர்​சனங்கள் புறந்​தள்​ளத்​தக்கவை அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x