Last Updated : 11 Jun, 2025 10:02 AM

1  

Published : 11 Jun 2025 10:02 AM
Last Updated : 11 Jun 2025 10:02 AM

ப்ரீமியம்
குழந்தை உழைப்பு முறை கொடுமைக்கு முற்றுப்புள்ளி எப்போது?

குழந்தைகளை நேசிக்காதவர்கள் எவரும் இல்லை, தம் மக்களின் மழலைச்சொல்லை ரசிக்காத குடும்ப அமைப்புகள் கிடையாது. பாப்பா பாட்டை ஒலிக்கவிடாத பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால், எந்த அளவுக்குக் கொண்டாடப்பட்டாலும் குழந்தைகளுக்கு - அவர்கள் வாழ்வதற்கு உகந்த, குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி. குழந்தை​களுக்கு எதிரான வன்முறை என்பது அலட்சி​யப்​படுத்​தப்பட்ட பெருந்​தொற்று என்றே சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இது அதிகரிக்​கிறது.

குழந்தை​களுக்கு எதிரான வன்முறையை - உடல்ரீ​தி​யானது, பாலியல் ​ரீ​தி​யானது, உளவியல்​ரீ​தி​யானது, தொழில்​நுட்​பரீ​தி​யானது, ஒதுக்​குதல் என - ஐந்து வகைகளாகப் பிரிக்​கலாம். உடல்ரீ​தியான வன்முறையில் அடித்தல், துன்புறுத்தல், கட்டாய உழைப்பு உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் பிற வன்முறை​களுக்கு எதிராக வலுவான சட்டங்கள் இருந்​தா​லும், சுதந்​திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட குழந்தைத் தொழில் உழைப்பு முறை இன்னும் இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x