Published : 09 Jun 2025 06:50 AM
Last Updated : 09 Jun 2025 06:50 AM

ப்ரீமியம்
மரபணு திருத்தப்பட்ட நெல் இந்தியாவுக்குத் தேவையா?

புதிய வகை நெல் ரகங்கள் கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆமாம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) சமீபத்தில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) இரண்டு நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்டதன் மூலம், இந்தியா விவசாயக் கண்டுபிடிப்புகளில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது. வேளாண் அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, முதன்முதலாக சீனாவின் நெல் உற்பத்தியை (14.7 கோடி டன்) விஞ்சி, இந்தியா 14.95 கோடி டன் உற்பத்தி செய்து, உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.

இது கூடுதலாக ஒரு சாதனை! அதேவேளை​யில், இது தொடர்பான சில முக்கியக் கேள்வி​களும் எழுகின்றன. இந்தியா ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக நெல் பயிரிடும்​போது, மரபணு திருத்​தப்பட்ட நெல் தேவையா? புதிய நெல் ரகங்கள் பாதுகாப்​பானவையா? இந்தியாவின் மொத்த விவசா​யிகளின் எண்ணிக்கை​யில், 86%ஐக் கொண்டுள்ள குறு, சிறு விவசா​யிகளுக்கு இப்புதிய ரகங்கள் பயனளிக்​குமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x