Last Updated : 05 Jun, 2025 06:41 AM

 

Published : 05 Jun 2025 06:41 AM
Last Updated : 05 Jun 2025 06:41 AM

ப்ரீமியம்
மாதவ் காட்கிலுடன் மலையில் ஒரு நடை

இந்தியாவின் மாபெரும் இயற்கைப் புதையல் மேற்குத் தொடர்ச்சி மலை. அதைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அமைத்த குழு 2011இல் அளித்த விரிவான அறிக்கை, அக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் காட்கிலின் பெயரில் மாதவ் காட்கில் அறிக்கை எனப்படுகிறது. காடுகளைக் காப்பதற்கு அறிவியல் முறைப்படி அவர் அளித்திருந்த பரிந்துரைகளைத் தென் மாநில அரசுகள் கண்மூடித்தனமாக எதிர்த்தன.

அதனால், இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. காடுகள் பாதுகாப்பில் நெடிய அனுபவம் வாய்ந்தவர் மாதவ் காட்கில். 1980இல் காடுகள் பாதுகாப்புச் சட்டம், உயிர்ப்பன்மைச் சட்டம் - 2002 ஆகியவற்றின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். இந்தியாவில் காடுகள், இயற்கை வளம் இன்றைக்கு மிச்சமிருப்பதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x