Published : 04 Jun 2025 07:35 AM
Last Updated : 04 Jun 2025 07:35 AM
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளுக்கு உணவு – சர்க்கரை நோய் தொடர்பாக அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, மாணவ - மாணவிகள் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிட அவர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி வளாகங்களில் சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பலகைகளை வைக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
என்ன காரணம்? - நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகச் சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இரண்டாம் வகை சர்க்கரை நோயால் (Type 2 diabetes) பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களில் 2% பேர் இரண்டாம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் பாதிப்பு பெருநகரங்களில் 3 முதல் 4%ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம் பெரியவர்களுக்கு மட்டுமே இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்பட்டு வந்த நிலையில், இப்போது மாணவ - மாணவிகளும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், ‘சர்க்கரைப் பலகை’ நிறுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT