Last Updated : 04 Jun, 2025 07:35 AM

 

Published : 04 Jun 2025 07:35 AM
Last Updated : 04 Jun 2025 07:35 AM

ப்ரீமியம்
பள்ளிகளில் ‘சர்க்கரைப் பலகைகள்’ பலன் தருமா?

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளுக்கு உணவு – சர்க்கரை நோய் தொடர்பாக அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, மாணவ - மாணவிகள் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிட அவர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி வளாகங்களில் சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பலகைகளை வைக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்ன காரணம்? - நாட்டில் கடந்த 10 ஆண்டு​களாகச் சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்​கப்​படுவது அதிகரித்து​வரு​கிறது. குறிப்பாக, இரண்டாம் வகை சர்க்கரை நோயால் (Type 2 diabetes) பலரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். 2023இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்​டுள்ள அறிக்கை​யில், 10 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்​களில் 2% பேர் இரண்டாம் வகை சர்க்கரை நோயால் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், இந்தப் பாதிப்பு பெருநகரங்​களில் 3 முதல் 4%ஆக இருப்​ப​தாகவும் தெரிவித்​துள்ளது. முன்பெல்லாம் பெரிய​வர்​களுக்கு மட்டுமே இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்பட்டு வந்த நிலையில், இப்போது மாணவ - மாணவி​களும் இந்த நோயால் பாதிக்​கப்​படு​கிறார்கள் என்பதால், ‘சர்க்​கரைப் பலகை’ நிறுவும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x