Published : 02 Jun 2025 06:47 AM
Last Updated : 02 Jun 2025 06:47 AM
‘நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மேதை’ என்று உலகமே கொண்டாடியபோதும், ஐன்ஸ்டைனை இன்னும் உயரத்தில் வைத்துப் பார்க்க யூதர்கள் விரும்பினர். தாங்கள் உருவாக்கிய இஸ்ரேலின் இரண்டாவது அதிபராக ஐன்ஸ்டைனை ஆக்குவதற்கு அவர்கள் முயன்றனர்; அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்க முயன்ற யூதர்களின் முனைப்பு முக்கியமானது. அது ஒரு சமூகத்தின் கடமை; நன்றிக்கடன். தங்களிடையே உருவாகும் ஆகப்பெரும் ஆளுமைகளைப் பாதுகாப்பதும் மதிப்புமிக்க பதவிகளில் வைத்து அழகு பார்ப்பதும் அச்சமூகத்தின் நாகரிகத்துக்கு அணி சேர்க்கும்.
கொண்டாடப்பட வேண்டிய மேதை: கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழே - உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய இடத்தில் - இசை உலகில் 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவின் இசைக்கூடம் இருக்கிறது. மிக எளிமையான கட்டிடம் அது. உலக இசை வல்லுநர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் பல இசைக் கோவைகள் அங்குதான் பிறக்கின்றன. உலகின் ஆகச் சிறந்த இசை வல்லுநர்களுக்கு எல்லாம் கனவாகவே முடிந்துபோன சிம்பொனி என்கிற வகைமையை 30 நாள்களில் எழுதி முடித்த தமிழ்ச் சமூகத்தின் ஓர் ஆளுமையை - அவர் வாழும் காலத்திலேயே - சிறப்பான ஓரிடத்தில் வைத்து அழகுபடுத்திப் பார்ப்பது ஓர் அரசின் / சமூகத்தின் கடமை இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT