Published : 02 Jun 2025 06:47 AM
Last Updated : 02 Jun 2025 06:47 AM

ப்ரீமியம்
இளையராஜா அடுத்த நூற்றாண்டுகளுக்குமானவர்!

‘நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மேதை’ என்று உலகமே கொண்டாடியபோதும், ஐன்ஸ்டைனை இன்னும் உயரத்தில் வைத்துப் பார்க்க யூதர்கள் விரும்பினர். தாங்கள் உருவாக்கிய இஸ்ரேலின் இரண்டாவது அதிபராக ஐன்ஸ்டைனை ஆக்குவதற்கு அவர்கள் முயன்றனர்; அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்க முயன்ற யூதர்களின் முனைப்பு முக்கியமானது. அது ஒரு சமூகத்தின் கடமை; நன்றிக்கடன். தங்களிடையே உருவாகும் ஆகப்பெரும் ஆளுமைகளைப் பாதுகாப்பதும் மதிப்புமிக்க பதவிகளில் வைத்து அழகு பார்ப்பதும் அச்சமூகத்தின் நாகரிகத்துக்கு அணி சேர்க்கும்.

​கொண்​டாடப்பட வேண்டிய மேதை: கோடம்​பாக்கம் பாலத்​துக்குக் கீழே - உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியக்​கூடிய இடத்தில் - இசை உலகில் 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவின் இசைக்​கூடம் இருக்​கிறது. மிக எளிமையான கட்டிடம் அது. உலக இசை வல்லுநர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் பல இசைக் கோவைகள் அங்குதான் பிறக்​கின்றன. உலகின் ஆகச் சிறந்த இசை வல்லுநர்​களுக்கு எல்லாம் கனவாகவே முடிந்துபோன சிம்பொனி என்கிற வகைமையை 30 நாள்களில் எழுதி முடித்த தமிழ்ச் சமூகத்தின் ஓர் ஆளுமையை - அவர் வாழும் காலத்​திலேயே - சிறப்பான ஓரிடத்தில் வைத்து அழகுபடுத்திப் பார்ப்பது ஓர் அரசின் / சமூகத்தின் கடமை இல்லையா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x