Last Updated : 01 Jun, 2025 07:00 AM

 

Published : 01 Jun 2025 07:00 AM
Last Updated : 01 Jun 2025 07:00 AM

ப்ரீமியம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல் | அஞ்சலி: கூகி வா தியாங்கோ 

ஆப்பிரிக்க இலக்கியத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவர் கூகி வா தியாங்கோ. நம் காலத்தின் மாபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர். காலனியம், நவகாலனியம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். கடந்த புதன் கிழமை தனது 87ஆம் வயதில் காலமானர் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்த அவர் மகன் எண்டுகா, தன் தந்தை நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறினார். 1988இல் எனக்கு வ.கீதாவின் வழியாக அறிமுகமான பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் கூகியும் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், அரசியல் கட்டுரைகள், மொழியாக்கங்கள் என இலக்கியத்தின் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து எண்ணற்ற விருதுகள் படைத்த அவருக்கு ஐந்து முறை எதிர்பார்க்கப்பட்ட நோபல் பரிசு கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x