Last Updated : 30 May, 2025 06:51 AM

 

Published : 30 May 2025 06:51 AM
Last Updated : 30 May 2025 06:51 AM

ப்ரீமியம்
முதியோருக்கான கொள்கையில் புதிய மாற்றங்கள் அவசியம்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மூத்த குடிமக்கள், நிதிப் பாதுகாப்பின்மை, மற்றவர்களைச் சார்ந்திருத்தல், எழுத்தறிவின்மை, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், சுகாதாரச் சவால்கள், முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், தனிமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

இவற்றின் காரணமாக, முதியவர்களுக்கு மிகவும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் ஆகியவை தேவைப்படுகின்றன. நிம்​ம​தி​யான, ஓய்வான எதிர்கால வாழ்க்கைக்​காகச் சொத்து சேர்த்து வைக்​கும் மக்கள், மூத்த குடிமக்​களான பிறகு அப்படிப்​பட்ட நிம்​ம​தியான வாழ்க்கையை அனுபவிக்​கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. இன்னொரு​புறம், கால மாற்​றங்​கள், மருத்துவ முன்னேற்​றங்​களின் அடிப்​படை​யில் முதி​யோர் என்ப​தற்கான வரையறைகள் இயல்பாக மாறிவரு​கின்றன. இந்தச் சூழலில், முதி​யோர் கொள்​கை​யில் புதிய மாற்​றங்கள் அவசி​யம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x