Published : 27 May 2025 06:20 AM
Last Updated : 27 May 2025 06:20 AM
முன்பொரு காலத்தில் மனிதன் இந்த உலகை அப்படியே உள்வாங்கினான். குழந்தைகளின் சிரிப்பொலி, அந்தி சாயும் நேரத்து மெல்லிய நிழல், குளிர்க்காற்றில் இலைகள் உதிரும் சத்தம் – எல்லாமே அவனுக்கு ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு வண்ண ஓவியம். மற்றவர் பார்க்கத் தவறியதை அவன் கூர்ந்து கவனித்தான்.
தெருவோரப் பூக்களின் மென்மையை, பறவைகளின் கீச்சொலியை, காற்று வீசும் திசையை உணர்ந்தான். அந்த அனுபவங்களே அவன் கைகளுக்குள் கலையாகவும், எழுத்துகளாகவும், இசையாகவும் உயிர்பெற்று எழுந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT