Published : 23 May 2025 06:55 AM
Last Updated : 23 May 2025 06:55 AM

ப்ரீமியம்
திரைப்படத்துக்கும் அரசியலுக்கும்தான் போகிறது கல்விக் கட்டணம்! - கல்வியாளர் தா.நெடுஞ்செழியன் நேர்காணல்

கல்வித் துறையில் எழும் சிக்கல்கள் சார்ந்த விவாதங்களில் தீர்வு நோக்கிய குரலை எழுப்பிவருபவர் தா.நெடுஞ்செழியன். உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உரிமைகளுக்காகவும் இவர் செயல்பட்டு வருகிறார். இந்திய உயர் கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகள், பிரச்சினைகள் குறித்து நெடுஞ்செழியன் அளித்த நேர்காணலின் சுருக்கம்:

உயர் கல்விக்கான ஆலோசனை வழங்குவதைச் சமூகத்தின் தேவையாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? - ​நான் சென்னை கிண்டி பொறி​யியல் கல்லூரி​யில் படித்து முடித்து, மென்​பொருள் துறை​யில் பணிபுரிந்து​வந்​தேன். ஏறக்​குறைய இந்தியா​வின் அனைத்​துப் பகுதி​களுக்​கும் சென்​றிருக்​கிறேன். அரசுக் கல்வி நிறு​வனங்​களில் குறிப்​பாக, மத்திய அரசுக் கல்வி நிறு​வனங்​களில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது நம் மாணவர்​களுக்​குத் தெரிவ​தில்லை. பெற்​றோர்களோ தமிழ்​நாட்​டைத் தாண்டி யோசிப்பதே இல்லை. நம் குழந்தைகள் சிறந்த கல்வி நிறு​வனங்​களில் சேரும் வாய்ப்பு​களைத் தேடித் தர வேண்​டும் என 2002இல் உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் பணியைத் தொடங்​கினேன்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x