Published : 18 May 2025 08:44 AM
Last Updated : 18 May 2025 08:44 AM
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இங்குத் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் அறிவிப்புகள், தமிழ்ப் பெயர்ப் பலகைகள், தமிழ்க் குரல்கள் எல்லாம் இருந்தாலும் இதுவரை இங்கு தமிழ்ப் புத்தகங்களுக்கான திருவிழா இதுவரை ஒருங்கிணைக்கப்பட்டதே இல்லை. முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் விடுதலை பெற்றதன் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகஇம்மாதம் 9 - 11ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. சிங்கப்பூர்த் தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 20 தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்றன. சிங்கப்பூரிலும் புத்தகத் திருவிழா நடத்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT