Published : 15 May 2025 06:26 AM
Last Updated : 15 May 2025 06:26 AM
மாவட்ட அளவில் கீழமை நீதிமன்றங்களால் சட்டத் தவறுகள் செய்யப்படும்போது, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்திய அரசமைப்பு வழங்குகிறது. இதேபோல், உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியால் வழங்கப்படும் தீர்ப்புகள் நிறுவப்பட்ட சட்டக் கொள்கைகளுடன் முரண்பட்டால், அவற்றை இரு நீதியரசர் அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். அரசமைப்பு விஷயங்கள் தொடர்பான மேல்முறையீடுகள் பொதுவாகத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு பெரிய அமர்வின் முன் வைக்கப்படும்.
அதிகபட்ச அளவில், இந்திய உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களின் இரு நீதியரசர் அமர்வுகளின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்கிறது - குறிப்பாக, அரசாங்கக் கொள்கையில் தலையிடும், குறிப்பிடத்தக்க நிதிப் பொறுப்புகளை விதிக்கும் அல்லது அரசமைப்பு விதிகளின் தவறான விளக்கங்களை உள்ளடக்கிய வழக்குகளில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT