Last Updated : 14 May, 2025 08:11 AM

 

Published : 14 May 2025 08:11 AM
Last Updated : 14 May 2025 08:11 AM

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு: பெண்​களின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்​றி!

பொள்​ளாச்சி பாலியல் பலாத்​கார வழக்​கில் குற்​ற​வாளி​கள் 9 பேருக்கும் சாகும்​வரை சிறை தண்​டனை​யும், பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு மொத்தம் ரூ.85 லட்​ச​ம் வழங்க கோவை மகளிர் நீதி​மன்ற நீதிபதி நந்​தினி தேவி அளித்​துள்ள தீர்ப்பு நாட்​டில் நடக்​கும் பலாத்​கார சம்​பவங்​களுக்கு முடிவு​கட்​டு​வதற்​கான தொடக்​கம்.

தமிழகத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​திய இந்த வழக்​கில் வெளிவந்​துள்ள தீர்ப்பை அனை​வரும் பாராட்டி வரு​கின்​றனர். இந்த குற்​றம் 2016 முதல் 2018 வரையி​லான கால​கட்​டத்​தில் நடந்​தது. ஆனாலும் பாதிக்​கப்​பட்ட பெண்​கள் பல்​வேறு சமூக காரணங்​களுக்​காக புகார் அளிக்க முன்​வர​வில்​லை. 2019-ம் ஆண்டு 19 வயதே ஆன பாதிக்​கப்​பட்ட பெண் துணிச்​சலுடன் அளித்த புகார் காரண​மாகவே இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்​தது. குற்​றப் பின்​னணி​யில் அப்​போதைய ஆளுங்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் இருந்​த​தால் அரசுக்கு மகளிர் அமைப்​பு​கள் மூலம் நெருக்​கடி ஏற்​பட்டு வழக்கு விசா​ரணை சிபிசிஐடி-க்கு மாற்​றப்​பட்​டது. பின்​னர் சிபிஐ-க்​கும் மாற்​றப்​பட்​டது.

இதன்​பிறகே குற்​ற​வாளி​கள் அரசி​யல் செல்​வாக்​கை​யும் மீறி நீதி​மன்​றத்​தில் நிறுத்​தப்​பட்​டனர். பாதிக்​கப்​பட்ட 8 பெண்​களும் துணிச்​சலுடன் வந்​து, நடந்த கொடூரத்தை நீதி​மன்​றம் ரகசி​ய​மாக நடத்​திய விசா​ரணை​யில் தெளிவுபடுத்​தினர். பெண்​கள் உள்​ளிட்ட 48 சாட்​சிகளும் எந்த குளறு​படி​யுமின்றி சாட்​சி​யம் அளித்​துள்​ளனர்.

இதன் அடிப்​படை​யிலேயே சிபிஐ-​யால் இந்த வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு கடுமை​யான தண்​டனை பெற்​றுத் தர முடிந்​துள்​ளது. ஆனால், உண்​மை​யில் அனைத்து பாலியல் வழக்​கு​களி​லும் இது​போன்று நடப்​ப​தில்​லை. பாதிக்​கப்​பட்ட பெண்​கள் முதல்​கட்​ட​மாக புகார் தரு​வதற்கே முன்​வரு​வ​தில்​லை. அதற்கு பல சமூக காரணங்​கள் கூறப்​படு​கின்​றன.

பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​களைச் செய்​பவர்​கள் இந்த பலவீனத்​தை​தான் தங்​கள் ஆயுத​மாக கையில் எடுக்​கின்​றனர். பாலியல் வன்​முறை​யில் ஈடு​பட்​டால் பெண்​கள் அவமானத்​துக்​குப் பயந்து வெளி​யில் சொல்ல மாட்​டார்​கள். காணொலி பதிவு செய்​து​விட்​டால், அதைக் காட்டி மிரட்ட முடி​யும் என்ற துணிச்​சல் குற்​றம் செய்ய நினைப்​பவர்​களுக்கு ஏற்​படு​கிறது.

வன்​முறை, சீண்​டல், பாலியல் அத்​து​மீறல் என எந்​தக் குற்​ற​மாக இருந்​தா​லும் பெண்​கள் துணிச்​சலுடன் புகார் தர முன்வர வேண்​டும். இத்​தகைய குற்​றங்​களில் ஈடு​பட்​டால் கடுமை​யான தண்​டனை உறுதி என்ற செய்​தி, குற்​றம் செய்ய நினைப்​பவர்​களுக்கு சென்​றடைந்​தால் மட்​டுமே பெண்​களுக்கு எதி​ரான இத்​தகைய குற்​றங்​களின் எண்​ணிக்கை குறை​யும். இதற்கு முதலில் பெற்​றோர் தங்​கள் பெண் குழந்​தைகளுக்கு அந்த துணிச்​சலை புகட்டி வளர்க்க வேண்​டும்.

வெளி உலகத்​துக்கு பயந்து ஓடி ஒளி​யும் வகை​யில் அவர்​களை துணிச்​சலற்​றவர்​களாக வளர்க்​கக் கூடாது. சமீப​கால​மாக பள்​ளி​களில் பாலியல் வன்​முறை குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் காவல்​துறை மற்​றும் சமூக நலத்​துறை மூலம் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இருந்​தா​லும், நடை​பெறும் பாலியல் சம்​பவங்​களு​டன் ஒப்​பிடும்​போது, இது​போன்ற விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் போதாது என்​பது தெளி​வாகிறது.

பள்​ளி, கல்​லூரி​களில் பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை குறித்​தும், அத்​தகைய சூழ்​நிலை வரும்​போது எப்​படி துணிச்​சலுடன் அணுகி காவல்​துறை​யில் புகார் அளிப்​பது என்​பது குறித்​த ஊக்​கத்​தை அவர்​களுக்கு அளிப்பதும் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x