Published : 12 May 2025 07:09 AM
Last Updated : 12 May 2025 07:09 AM
அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
சிறிய சிறிய இனக் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் அரசமைப்பு என்பதை உருவாக்கி, மேலும் மேலும் அதனை விரிவாக்கித் தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் அரசு நிர்வாகத்துக்கு உள்பட்டதாக மாற்றிக்கொண்டது, அன்றாட வாழ்விலிருந்து வரலாற்றுத் தன்னுணர்வுக்குப் பயணப்பட்டதன் முக்கியமான தடம் எனலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT