Published : 11 May 2025 06:34 AM
Last Updated : 11 May 2025 06:34 AM
அஞ்சலி: சிறார் எழுத்தாளர் ரேவதி
சிறார் இலக்கியத்தையே தமது முதன்மைத்தடமென வகுத்துக்கொண்ட முன்னோடிகள் தமிழில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் தனக்கெனத் தனித்தவழியமைத்துகொண்டவர் சிறார் எழுத்தாளர் ரேவதி. சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த ரேவதி, ‘குழந்தை இலக்கியக் கழகம்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் ‘பாட்டு வாத்தியார்’ எனும் கதையை எழுதினார். இக்கதை 1952இல் வெளியானது. அதற்கு முன்பே சில கதைகளை அவர் எழுதியிருந்தபோதும் பிரசுரமான முதல் கதை இதுவே. அவரின் 16 வது வயதிலேயே எழுத்தாளராகி விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT