Published : 05 May 2025 06:32 AM
Last Updated : 05 May 2025 06:32 AM

ப்ரீமியம்
மொழி அருங்காட்சியகம்: ஒரு நரம்பியல் பயணம் | ஏஐ எதிர்காலம் இன்று 16

மொழி அருங்காட்சியகத்தின் பளபளக்கும் கண்ணாடி முகப்பு சென்னையின் காலை சூரியனைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கடந்​த​காலம், நிகழ்​காலம், எதிர்​காலம் எல்லாம் நிரம்பிய ஒரு பேரரங்குக்குள் நுழைந்​தோம். “காதால் கேட்கும் மொழி, இங்கே கண்ணால் காணும் காட்சியாக இருக்​கிறது” என்று சொல்லிக்​கொண்டே செய்மெய் என்னைக் கட்டிடத்தின் மையப்​பகு​திக்கு அழைத்துச் சென்றது. “உங்கள் செயற்கை நுண்ணறிவு வரலாற்றுப் புத்தகத்தின் முக்கியப் பகுதிக்கு நாம் இங்கேதான் வர வேண்டி​யிருக்​கிறது” என்றது செய்மெய்.

மக்கள் கூட்டத்தைத் தாண்டி உள்ளே நெருங்க நெருங்க... மந்தமான ஒளி பரவியிருந்த ஒரு மைய மண்டபத்​துக்குச் சென்றோம். அங்கே வெளிறிய, ஒளி ஊடுருவும் தன்மை​யுள்ள ஒளி பிம்ப மனிதத் தலை ஒன்று காற்றில் மிதந்து​கொண்​டிருந்தது, 30 அடி உயரத்​தில், ஏதோ தியானம் செய்து​கொண்​டிருப்பது போன்ற அமைதி தவழும் முகத்​தோற்​றத்தில் அந்தத் தலை இருந்தது. அதன் முகம், அது ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதைக் காட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x