Last Updated : 02 May, 2025 06:30 AM

 

Published : 02 May 2025 06:30 AM
Last Updated : 02 May 2025 06:30 AM

ப்ரீமியம்
காலநிலை மாற்றம் இல்லாவிட்டாலும் சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து இந்தியா தப்பியிராது! - வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முன்னணி வரலாற்​றாளர், சுற்றுச்​சூழல் ஆய்வாளர் ராமச்​சந்திர குஹா. ‘Speaking with Nature: The Origins of Indian Environmentalism’ (ஹார்பர் காலின்ஸ் வெளியீடு) நூலைச் சமீபத்தில் வெளியிட்​டுள்​ளார். சுற்றுச்​சூழல் சீர்கேட்டின் ஆபத்துகள் குறித்து, இந்தியாவை மையமாகக் கொண்டு ஆழமான பார்வை​யுடன் சிந்தித்த 10 முன்னோடிச் சிந்தனை​யாளர்களை மையப்​படுத்தி இந்த நூலை எழுதி​யுள்​ளார். இந்தப் பின்னணியில் அவர் அளித்த நேர்காணல்:

இப்போது எந்த ஒரு சுற்றுச்சூழல் இயக்கமோ, போராட்டமோ பெரிய அளவில் இல்லை. வளர்ச்சிக்கு எதிர்நிலையாகச் சுற்றுச்சூழல் என்கிற வாதத்தில், வளர்ச்சிக்காக நாம் சமரசம் செய்துகொண்டுவிட்டோம் எனச் சொல்லலாமா? - வளர்ச்சியைச் சுற்றுச்​சூழலுக்கு எதிராக முன்நிறுத்துவது ஒரு கற்பிதம். இலக்கி​யத்தில் இந்த இரண்டும் எதிர்மை நிலையில் நிறுத்​தப்​பட்​டுள்ளன. தொழில் துறையினரும் அரசியல்​வா​தி​களும் இதை அடிக்கடி முன்னிறுத்​தி​யிருக்​கிறார்கள். இது அவர்களது அறியாமை. சுற்றுச்​சூழல் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதல் அவர்களுக்கு இல்லை, அத்துடன் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவர்கள் நினைப்​ப​தால்தான் இப்படிக் கருதுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x