Published : 27 Apr 2025 07:52 AM
Last Updated : 27 Apr 2025 07:52 AM

ப்ரீமியம்
பதின்ம வயதின் வண்ணங்கள் | நாவல் வாசிகள் 4

ப​தின்ம வயது என்​பது ஒரு விநோத ராட்​டினம். அது எப்​படிச் சுழலும் என யாராலும் கண்​டறிய முடி​யாது. மனதின் ரகசிய ஜன்​னல்​கள் பதி​மூன்​று, பதி​னான்கு வயதில் திறந்​து​கொள்​கின்​றன. அதன் வழியே காணும் காட்​சிகள் ஆசையைத் தூண்​டு​கின்​றன. அந்​தப் பரு​வத்​தில் பெரிய​வர்​கள் உலகிற்​கும் சிறார் உலகிற்​கும் நடு​வில் ஊசலாட ஆரம்​பிக்​கிறார்​கள்.

அந்த வயதில்​தான் கண்​ணாடியோடு நெருக்​கம் கொள்​ளத் தொடங்​கு​கிறார்​கள். கண்​ணாடியோ குற்​றவுணர்​வைத் தூண்​டு​கிறது. நான் அழகாக இருக்​கிறே​னா, எனத் திரும்​பத் திரும்​பக் கண்​ணாடி​யிடம் கேட்​கிறார்​கள். கண்​ணாடி பதில் சொல்​வ​தில்​லை. அதன் மௌனம் உண்​மை​யைப் புரிய​வைக்​கிறது. தன்னை உலகம் பார்க்​கிறது என்​ப​தை​யும், தான் உலகத்​தைப் பார்க்​கிறேன் என்​ப​தை​யும் அந்த வயதில் நன்​றாக உணர்​கிறார்​கள். அது​வரை கையில் வைத்து விளை​யாடிய பொம்​மை​களைத் தூக்கி எறிந்​து ​விட்டு விருப்​ப​மான ஆணை​யோ, பெண்​ணையோ உடன் வைத்து ஆசைமொழி பேசி விளை​யாட ஆசைப்​படு​கிறார்​கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x