Published : 25 Apr 2025 06:30 AM
Last Updated : 25 Apr 2025 06:30 AM
எழுத்தாளரும் கல்வியாளருமான சாலை செல்வம், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குழந்தைகளின் கல்வி சார்ந்து மதுரையில் இயங்கும் கூழாங்கல் கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநர் - செயலராக இருந்திருக்கிறார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் புதுச்சேரி பிரிவில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர். மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் அவருடனான நேர்காணல்:
தொடக்கத்தில் பெண்கள் சார்ந்து செயல்பட்டுவந்த நீங்கள் சிறார் இலக்கியம், வாசிப்பு சார்ந்து செயல்படத் தொடங்கியது எப்போது? - பெண்களுடன் இணைந்து வேலை செய்வது என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியது. பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்குக் குழந்தைகளின் மேம்பாடும் அவசியம் என்று தோன்றியபோது கல்வி சார்ந்து பணியாற்றுவது இயல்பாக நடந்தது. அந்தக் காலத்தில் நாம் பயின்றபோது கிடைத்ததோடு ஒப்பிட்டதில், வாசிப்பு குறைவாக இருப்பது தெரிந்தது. அந்தக் காலத்தில் நான் படித்த ‘பகல் கனவு’, ‘டோட்டோசான்’, ரஷ்ய இலக்கியமான ‘குழந்தைகள் வாழ்க’ (ஷ. அமோனஷ்விலி) போன்ற புத்தகங்கள், குழந்தைகளிடம் பெரியவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், கல்வித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT