Last Updated : 23 Apr, 2025 06:30 AM

 

Published : 23 Apr 2025 06:30 AM
Last Updated : 23 Apr 2025 06:30 AM

ரத்து செய்யப்படும் அமெரிக்க விசா | சொல்... பொருள்... தெளிவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசா எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 30% குறைந்துள்ளது; குறிப்பாக சீனா, வியட்நாம், ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களுக்கு வழக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறி​விப்பும் இல்லாமல் அமெரிக்​காவில் இந்திய மாணவர்​களின் விசா ரத்து செய்யப்​பட்​டுள்ளது, அங்கு கல்வியைத் தொடரும் மாணவர்​களிடம் இது கவலையை ஏற்படுத்​தி​யுள்ளது.

எஃப் - 1 விசா: அமெரிக்​காவில் குறிப்​பிட்ட காலத்​துக்குக் கல்லூரி, பல்கலைக்​கழங்​களில் படிக்க விரும்பும் மாணவர்​களுக்கு வழங்கப்​படும் குடியேற்றம் அல்லாத விசாவே ‘எஃப்-1’ விசா. ‘எம்-1’ விசா என்பது தொழில்சார் படிப்பு​களுக்காக வழங்கப்​படு​கிறது.

அமெரிக்கா ஓர் ஆண்டில் அதிகமாக விநியோகிக்கும் விசாவாக ‘எஃப்-1’ இருந்​தா​லும், பல்வேறு கட்டுப்​பாடுகளை இது கொண்டுள்ளது. அதில் முதன்​மை​யானது ஒரு தனிநபர் தற்காலிக​மாகப் படிக்கும் நோக்கத்​துடன் மட்டுமே அமெரிக்கா​வுக்கு வர வேண்டும் என்பது. அதாவது, பட்டப்​படிப்பு முடிந்​தவுடன் அவர் நாடு திரும்​பிவிட வேண்டும்.

நாடுகள் நிலவரம்: அமெரிக்​காவின் அதிபராக இரண்டாவது முறையாகத் தேர்ந்​தெடுக்​கப்பட்ட டிரம்ப், வெளிநாட்​டினருக்கு எதிராகக் கடுமையான குடியேற்ற விதிகளை நடைமுறைப்​படுத்தி வருகிறார். குறிப்பாக, அமெரிக்​காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் இந்த நடவடிக்கைகளால் பாதிப்​புக்கு உள்ளாகி​யுள்​ளனர்.

போராட்​டங்கள், சிறு சிறு சட்ட விதிமீறல்​களுக்கு எல்லாம் மாணவர்​களின் விசா ரத்து செய்யப்​பட்டு​விடுவதாக மாணவர்கள் விமர்​சிக்​கின்​றனர். ரத்து செய்யப்பட்ட மாணவ விசாக்​களில் 50% இந்திய மாணவர்​களு​டையவை என அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்​துள்ளது.

அடுத்த இடத்தில் சீன மாணவர்கள் (14%) உள்ளனர். தென் கொரியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்​களின் விசாக்​களும் கணிசமாக ரத்து செய்யப்​பட்​டுள்ளன.

விசா நிராகரிப்பு​களுக்கு அமெரிக்கா தரப்பில் உரிய விளக்கம் இதுவரை வழங்கப்​பட​வில்லை. எனினும், மறுக்​கப்பட்ட விண்ணப்​பங்களை மதிப்​பாய்வு செய்ததன் அடிப்​படை​யில், தனிப்பட்ட விவரங்கள், முந்தைய கல்விப் பின்னணி, துணை ஆவணங்​களில் உள்ள சிறிய முரண்​பாடுகள் போன்றவை நிராகரிப்​புக்குக் காரணமாக இருக்​கலாம் எனக் கல்வி​யாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

கடந்த வருடங்​களில்... 2014-15இல் அமெரிக்​காவில் மாணவ விசா விண்ணப்​பங்​களின் எண்ணிக்கை 8.56 லட்சமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டு​களில் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்​கியது. 2020இல், கரோனா தீவிரமாக இருந்தபோது விசா எண்ணிக்கை 1.62 லட்சமாகக் குறைந்தது. 2024இல் ஜனவரி முதல் செப்டம்​பர்வரை 64,008 இந்திய மாணவர்​களுக்கு மட்டுமே விசா வழங்கப்​பட்டது. 2023இல் இதே காலக்​கட்​டத்தில் 1.03 லட்சம் இந்திய மாணவர்​களுக்கு விசா அளிக்​கப்​பட்டது குறிப்​பிடத்​தக்கது.

2014இல் மறுக்​கப்பட்ட விசா விகிதத்​துடன் ஒப்பிடு​கை​யில், இந்தப் பத்தாண்​டு​களில் விசா நிராகரிப்பு விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்​துள்ளது. 2022 - 2023இல் அமெரிக்கா​வுக்கு வந்த மாணவ விசாக்​களின் எண்ணிக்கை 6.99 லட்சம், இதில் 2.53 லட்சம் விசாக்கள் நிராகரிக்​கப்​பட்டன.

2023-24இல் வந்த மாணவ விசாக்​களின் எண்ணிக்கை 6.79 லட்சமாக இருந்த நிலையில் 2.79 லட்சம் விசாக்கள் நிராகரிக்​கப்​பட்டன. டிரம்ப் அதிபரான பிறகு, கல்வி தொடர்பான விசாக்கள் மட்டுமல்​லாது, சுற்றுலா விசாக்​களும் மறுக்​கப்​படு​கின்றன; முன்பு 10% விசாக்கள் மறுக்​கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 20 - 30% ஆக அதிகரித்​துள்ளது எனத் தனியார் விசா முகமைகள் தெரிவித்​துள்ளன.

சட்ட வழியில்... விசா மறுக்​கப்​பட்டது தொடர்பாக, தேசியச் சட்டம், குடியேற்றச் சட்டங்களை அமெரிக்கா கடுமையாக நடைமுறைப்​படுத்​திவருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்​பாளர் மார்கரெட் மேக்லியோட் தெரிவித்​துள்ளார். வெளிநாட்​டினர் சட்டத்தைப் பின்பற்றினால் அமெரிக்கா அவர்களுக்கான வாய்ப்புகளை அளிக்​கும்; ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் விளைவு​களைச் சந்திப்​பார்கள் எனவும் அவர் எச்சரித்​துள்ளார்.

அமெரிக்​காவின் இந்த முடிவால் 170 கல்லூரி​களில் பயின்று வந்த 1,100 சர்வதேச மாணவர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். விசா நீக்கத்​துக்கு எதிராக​வும், தாங்கள் நாடு கடத்தப்​படு​வதைத் தடுக்கும் வகையிலும் இந்திய மாணவர்கள் நீதிமன்​றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்​காவில் மாணவர்கள் எதிர்​கொண்​டுள்ள இந்த நெருக்​கடியைச் சமாளிக்க சட்டப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்​சகமும் வலியுறுத்​தி​யுள்ளது. இச்சட்டப் போராட்​டத்தில் இந்திய மாணவர்​களுடன், சீன மாணவர்​களும் இணைந்துள்ளது கவனிக்​கத்​தக்கது.

கல்வித் தரத்தை மேம்படுத்தல்: அமெரிக்கா மட்டுமல்​லாது, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும் சர்வதேச மாணவர்​களுக்கு அளிக்​கப்பட்ட விசாக்கள் கணிசமாகக் குறைக்​கப்​பட்டுவருகின்றன. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதலும் சில ஆண்டுகளாக அதிகரித்து​வருவது, அங்கு பயிலும் மாணவர்​களிடம் அச்சத்தை ஏற்படுத்​தி​யுள்ளது.

மேம்பட்ட கல்வி, பொருளாதார நிலைகளுக்காக இந்திய மாணவர்கள் பலரும் வெளிநாடு​களில் கல்வி பயில விரும்​பு​கின்​றனர். இந்தியாவில் உயர் படிப்பு​களுக்குப் போதிய வேலைவாய்ப்பு இல்லாத சூழலும் மாணவர்​களின் வெளிநாட்டுத் தேர்வுக்குக் காரணமாக உள்ளது.

ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கற்றலுக்குச் சம வாய்ப்புகளை உருவாக்குவது, மேம்பட்ட ஆசிரியர் பயிற்சி, உள்கட்​டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்ற​வற்றில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஆராய்ச்சி அடிப்​படையிலான கல்வி நிலையங்களை உருவாக்கு​வதில் இந்தியா எதிர்​கொண்​டிருக்கும் சவால்​களைச் சீரமைத்து சரிசெய்வது அவசியம். இதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்​கழகங்கள் மூலம் சாத்தி​ய​மாகும் வேலைவாய்ப்பு​களுக்கு இணையானவற்றை இந்தியப் பல்கலைக்கழகங்களும் உருவாக்கிட முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x