Last Updated : 22 Apr, 2025 06:30 AM

 

Published : 22 Apr 2025 06:30 AM
Last Updated : 22 Apr 2025 06:30 AM

ப்ரீமியம்
காவிரி டெல்டா: அகழாய்வுக்கு வராத வரலாறு

நட்சத்திரங்களின் ஒளியில் சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு தன் நூற்றாண்டை நடத்துகிறது. அதன் நிறைவு விழாவில் சிந்துவெளி எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள உதவும் வழியைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணர்வோருக்கு ரூ.8.5 கோடி பரிசைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, குஜராத்தின் துவாரகா கடல் பகுதி​களில் நீருக்கு அடியில் மீண்டும் ஓர் ஆய்வுப் பணி தொடங்கி​யிருக்​கிறது. ஒன்பது பேர் அடங்கிய மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுக்குழு இதில் ஈடுபட்​டிருக்​கிறது.

ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் பஞ்ச திராவிட நாடுகள் என்கிற பெயரில் தமிழ்​நாடு, ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகியவற்றைச் சிந்து​வெளி​யுடன் இணைக்​கிறார். திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரம் என்று தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பால​கிருஷ்ணனின் ஆய்வு குறிப்​பிடு​கிறது. இந்த மகத்தான முயற்சி​களில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மகாநதி​யாகப் பெருக்​கெடுக்க வேண்டிய காவிரிச் சமவெளியின் ஆய்வு தேங்கி நிற்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x