Published : 21 Apr 2025 06:38 AM
Last Updated : 21 Apr 2025 06:38 AM
அண்மையில், திருப்பூர் மாவட்டத்தில் முதுகலைப் பட்ட மாணவி ஒருவர், தனது சகோதரரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப வறுமையிலும் பகுதிநேர வேலைக்குச் சென்று படித்துவந்த அந்தப் பெண், வெண்மணி என்கிற ஆய்வு மாணவரைக் காதலித்து உள்ளார்.
இருவரும் எதிர்காலத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்திருந்த நிலையில், அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இந்தக் கொலையை ஆணவக் கொலை எனக் கூற முடியாது என்று கூறியதாக வெளிவந்த செய்தி, சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT