Published : 20 Apr 2025 07:09 AM
Last Updated : 20 Apr 2025 07:09 AM

ப்ரீமியம்
வாண்டுமாமா: தமிழ்ச் சிறார் இலக்கிய ஆசிரியர்!

எனது பள்​ளிக் காலத் தமிழ் ஆசிரியர் யாரெனக் கேட்​டால், எனது உடனடி பதில் எழுத்​தாளர் வாண்​டு​மாமா என்​ப​தாகவே இருக்​கும். வாண்டுமாமா பன்​முகத்​தன்மை கொண்ட எழுத்​தாளர், அவர் எந்​தப் பள்​ளி​யில் கற்​றுத் தந்​தார்? எந்​தப் பள்​ளி​யிலும் அவர் ஆசிரிய​ராக பணிபுரிந்​திருக்​க​வில்​லை. ஆனால் ‘பூந்​தளிர்’, ‘கோகுலம்’, தன் சிறார் நூல்​கள் வழி​யாக ஆயிரக்​கணக்​கான தமிழ்ச் சிறாருக்கு அவர் ஆசிரிய​ராக இருந்​திருக்​கிறார் என உறு​திபடக் கூற முடி​யும்.

தமிழ்ச் சிறார் எழுத்​துக்கு வலு​வான அடித்​தளத்தை அழ.வள்​ளியப்​பா, பெரிய​சாமித் தூரன், ஆர்​.​வி. போன்​றவர்​கள் இட்​டிருந்​தார்​கள். அடுத்த கட்​ட​மாக அதைப் பெரிய அளவில் வளர்த்​தவர்​களில் முதன்​மை​யானவர் வாண்​டு​மா​மா. 1990கள், 2000 வரையி​லான தமிழ்ச் சிறார் எழுத்​தாளர்​கள் இலக்​கணப் பிழை​யின்​றி, எளிய தமிழில், சுவாரசி​ய​மாக எழுதும் திறன் வாய்க்​கப் பெற்​றிருந்​தார்​கள். அழ.வள்​ளியப்​பா, வாண்​டு​மாமா போன்​றோரை தொடர்ச்​சி​யாக வாசித்த ஒரு​வர் தமிழில் சரள​மாக வாசிக்​கும், எழுதும் திறனை எளி​தாக வளர்த்​துக்​கொண்​டு​விடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x