Published : 18 Apr 2025 09:22 AM
Last Updated : 18 Apr 2025 09:22 AM
சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும் உருமாற்றினார்.
ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பின்னர், அவருடைய இயக்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ்-இந்தியாவில் பேரசைவுகளை ஏற்படுத்தின. அம்பேத்கருக்கும் மதராஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த சமூக விடுதலை இயக்கங்களுக்கும் ஆழமான நட்பு உருவானது. அவரை காங்கிரஸ் இயக்கம் விமர்சித்தது; சாதியைப் பேண விரும்பிய வைதீகர்கள் எதிர்த்தனர். அம்பேத்கர் எப்போதும் ஏதோ ஒரு கோணத்தில் பேசப்பட்டார்; இக்காலத்திலும் அது தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT