Last Updated : 17 Apr, 2025 06:30 AM

 

Published : 17 Apr 2025 06:30 AM
Last Updated : 17 Apr 2025 06:30 AM

ப்ரீமியம்
சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை: நெதர்லாந்து கற்றுத்தரும் பாடம்

இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நாட்டில் பரவலாகப் பேச்சு இருக்கிறது. வேதிக் கலப்பற்ற காய்கறிகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும் விளைபொருள்களின் விலை, விநியோகம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சமீபத்தில் நான் நெதர்லாந்துக்குச் சென்றிருந்தபோது, நஞ்சில்லாத காய்கறி உற்பத்தி / நுகர்வு முறையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அவை, நம்மூருக்கும் பொருத்தமானவைதான்.

கல்​லூரித் தோழிகளின் முன்னெடுப்பு: அமெரிக்​கா​விலும் ஐரோப்பிய நாடுகளிலும் நஞ்சில்லாத காய்கறிகளை வாங்கச் சிறந்த வழியாக இருப்பது ‘சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை’ (Community Supported Agriculture). இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்பவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சொந்த / குத்தகை நிலத்தில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்கிறார்கள்; வீடுகளுக்குச் சென்றோ அல்லது மையமான இடங்களுக்குக் கொண்டு​சென்றோ அவற்றை விநியோகிக்​கிறார்கள். இதற்கு வேளாண் பருவம் தொடங்கும் முன்னரே நுகர்வோர் பணம் செலுத்தி உறுப்​பின​ராகிவிட வேண்டும். நெதர்​லாந்தில் இது சிறப்​பாகச் செயல்​படுத்​தப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x