Last Updated : 13 Apr, 2025 07:44 AM

 

Published : 13 Apr 2025 07:44 AM
Last Updated : 13 Apr 2025 07:44 AM

ப்ரீமியம்
குழந்தை எழுத்​தாளர் சங்​கத்​தின் பவள விழா ஆண்டு

1950 ஆம் ஆண்டு இந்​திய அரசி​யல் வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டு. ஆம், அரசி​யலமைப்​புச் சட்​டம் இயற்​றப்​பட்​டு, உலக அரங்​கில் குடியரசு நாடாக தன்​னைப் பறை​சாற்​றிக் கொண்​டது. அதே ஆண்டு இன்​னொரு வகை​யில் உலக இலக்​கிய வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டாக அமைந்​தது. 1950, ஏப்​ரல் 15 ஆம் நாள் அத்​தகைய சிறப்​பிற்கு காரண​மாக இருந்​தது.

குழந்தை இலக்​கி​யத்​தின் அடை​யாள​மாகத் திகழ்ந்து வரு​கிற அழ.வள்​ளியப்பா சென்​னை​யில், பதிப்​புத்​துறை வித்​தகரும் தனது நண்​பரு​மான பழனியப்​பா​வின் வீட்​டில் ஏப்​ரல் 15 அன்று ஒரு முக்​கிய​மான சந்​திப்​பிற்கு ஏற்​பாடு செய்​திருந்​தார். அந்த வீடு தான் குழந்​தைப் பதிப்பக அலு​வல​க​மாக​வும் அப்​போது செயல்​பட்​டது. எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், ஓவியர்​கள், சிறார் இதழ்​களின் ஆசிரியர்​கள், பதிப்​பாளர்​கள் என குழந்தை இலக்​கியச் செழு​மைக்கு வித்​திடு​கிற அனைத்து தரப்​பிற்​கு​மான அழைப்பு அது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x