Last Updated : 11 Apr, 2025 08:44 AM

 

Published : 11 Apr 2025 08:44 AM
Last Updated : 11 Apr 2025 08:44 AM

வனப்​பகு​தியை நாடும் இளைய தலை​முறை!

கோப்புப் படம்

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யடைந்த இந்த கால​கட்​டத்​தில், நகர்ப்​புற வாகன இரைச்​சலில் இருந்து விடு​பட்டு இயற்கை சூழலை அனுபவிக்க, வனப்​பகு​தி​களை நாடும் இளைஞர்​களின் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இயற்கை எழில் கொஞ்​சும் மலைப்​பிரதேசங்​களான ஊட்​டி, கொடைக்கானல் போன்ற பகு​தி​களுக்கு மக்​கள்படையெடுப்​ப​தால், நெரிசலை தவிர்க்க உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு ‘இ-​பாஸ்’ அறி​முகம் செய்​துள்​ளது. அனு​ம​திக்​கப்​படும் வாக​னங்​களின் எண்​ணிக்​கை​யும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​போன்ற பிரபல​மான சுற்​றுலா தலங்​களை​யும் தாண்​டி, அடர்ந்த காடு​களுக்​குள் ‘ட்​ரெக்​கிங்’ எனப்​படும் மலை​யேற்​றப்பயிற்சி மேற்​கொள்​ளும் இளைஞர்​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, தகவல் தொழில்​நுட்ப பணி​யில் ஈடு​படும் இளைஞர்​கள் இத்​தகைய மலை​யேற்ற நடைப​யிற்​சியை அதி​கம் விரும்​பு​கின்​றனர். அனு​ம​திக்​கப்​ப​டாத காட்​டுப்பகு​தி​களுக்​குள் அவர்​கள் சென்று மலை​யேற்ற நடவடிக்​கை​யில் ஈடு​பட்​ட​தில் அசம்​பா​விதங்​கள் நடந்​ததை அடுத்து, தமிழக வனத்​துறையே அங்​கீகரிக்​கப்​பட்ட மலை​யேற்​றப்பாதைகளை உரு​வாக்கி முறைப்​படி அனு​மதி அளித்து வரு​வது வரவேற்​கத்​தக்​கது.

தமிழகத்​தில் நீல​கிரி, கொடைக்​கானல், கன்​னி​யாகுமரி உள்​ளிட்ட பகு​தி​கள் அடங்​கிய 14 மாவட்​டங்​களில் 40 மலை​யேற்​றப் பாதைகளில் முறைப்​படி அனு​மதி அளிக்​கப்​படு​கிறது. 5 பேர் கொண்ட குழு ஒன்​றுக்கு வனப்​பகு​தியை நன்​கறிந்த வழி​காட்டி ஒரு​வர் துணை​யாக செல்​ல​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வின் சிலி​கான் வேலி எனப்​படும் பெங்​களூரு நகரத்​தில் 50 லட்​சத்​துக்​கும் அதி​க​மான இளைஞர்​கள் தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் அதைச்​சார்ந்த பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அவர்​கள் அதிக அளவில் வனப்​பகு​தி​களில் மலை​யேற்​றம் செல்ல விரும்​புவதை அடுத்​து, சிக்​மகளூரு, தட்​சிண கன்​னடா உள்​ளிட்ட பகு​தி​களில் புதி​தாக 32 மலை​யேற்​றப் பாதைகளைக் கண்​டறிந்து அனு​ம​தி​யளிக்க கர்​நாடக அரசு முடிவு செய்​துள்​ளது. உடல் உழைப்பு இல்​லாத தகவல் தொழில்​நுட்ப பணி, அதிக நேர வேலை, பகல்​-இரவு வேறு​பாடின்றி உழைத்​தல், பணியை முடிப்​ப​தற்​கான இலக்கு உள்​ளிட்ட பல்​வேறு நெருக்​கடிகளில் சிக்​கித் தவிக்​கும் இளைஞர்​கள் மாற்று மருந்​தாக இது​போன்ற ஆள் அரவ​மற்ற வனப்​பகு​தி​களில் தங்​கள் நேரத்தை செல​விட விரும்​பு​கின்​றனர்.

குறைந்த வயதுடைய இளைஞர்​கள் மனஅழுத்​தம் காரண​மாக இதயக் கோளாறால் உயி​ரிழக்​கும் சம்​பவங்​களும் ஆங்​காங்கே நடக்​கின்​றன. இதனால், உடல் மற்​றும் மன ஆரோக்​கி​யத்​தின் மீதான அக்​கறை முன்​னெப்​போதை​யும்​விட தற்​போது அதி​கரித்​துள்​ளது. கான்​கிரீட் காடு​களில் இருந்து வில​கிச்​சென்​று, மனிதகுலம் இயற்​கையை நோக்கி திரும்​புவதற்​கான அறிகுறி​யாகவே இளைஞர்​களின் மனநிலை​யில் தற்​போது ஏற்​படும் மாற்​றம் கருதப்​படு​கிறது.

தமிழகத்​தில் புதி​தாக கட்​டப்​படும் அடுக்​கு​மாடி கட்​டு​மான திட்​டங்​களுக்கு அனு​ம​தி​யளிக்​கும்​போது, திட்​டத்​தின் ஒருபகு​தி​யாக, குறிப்​பிட்ட அளவில் வனப்​பகுதி அமைய வேண்​டும் என்று சிஎம்​டிஏ நிர்​வாகம் நிபந்​தனை விதிப்​பது இயற்கை மீதான அக்​கறை​யுடன் எடுக்​கப்​படும் மிக முக்​கிய​மான நடவடிக்​கை​யாகும். பரு​வநிலை மாற்​றம், வெப்ப அலை போன்ற அசா​தாரண சூழ்​நிலைகளை சமாளிக்​க​வும், எதிர்​காலத்​தில் இயற்​கையை பாது​காக்​க​வும் பசுமைப் பரப்பை அதி​கரிப்​ப​தற்​கான மேலும் பல புதிய வி​தி​முறை​களை அரசு அமைப்​பு​கள்​ வகுப்​பது அவசி​யம்​.​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x