Published : 10 Apr 2025 06:47 AM
Last Updated : 10 Apr 2025 06:47 AM

ப்ரீமியம்
மயன்மார் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு ஒரு பாடம்!

2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி, தென்கிழக்கு ஆசியாவிலேயே நிலநடுக்கச் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதியான சகைங் பிளவு (Sagaing Fault) அருகே 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மயன்மாரில் பேரழிவுச் சேதத்தை ஏற்படுத்தியது. மோசமான கட்டமைப்பு / வடிவமைப்புகளால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

குறிப்பாக, வலுவூட்டப்படாத செங்கல் அல்லது தரம் குறைந்த பொருள்களால் ஆன கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பொருளாதாரக் கட்டுப்பாடுகள், பழமையான கட்டிட விதிமுறைகள் போன்ற காரணிகள் சேதத்தை மேலும் அதிகரித்து, கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x