Last Updated : 09 Apr, 2025 06:30 AM

 

Published : 09 Apr 2025 06:30 AM
Last Updated : 09 Apr 2025 06:30 AM

அதிகரிக்கும் தற்கொலைகள் | சொல்... பொருள்... தெளிவு

உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் சுமார் 7 லட்சம் பேர் வரை தற்கொலை செய்துகொள்கின்றனர்; குறிப்பாக, மிகக் குறைந்த – நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகள், தற்போது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளன.

2018 - 2022க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மனநலன் தொடர்பான தற்கொலை 44% அதிகரித்​துள்ளது. தற்கொலை செய்து​கொள்​பவர்​களில் இளைஞர்களே அதிகம் எனத் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்​துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் மனநல ஆரோக்​கியம் சார்ந்த தீவிரக் கேள்விகளை எழுப்பு​கின்றன.

ஆய்வுகள்: பெருந்​தொற்றுக் காலக்​கட்​டத்தில் குடும்ப உறுப்​பினர்களை கரோனா​வுக்குப் பறிகொடுத்தது, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் காரணமாகஇந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகக் காணப்​பட்டது. 2019 உடன் ஒப்பிடும்போது 2020இல் மனநலன் தொடர்பான தற்கொலைகள் 25% அதிகரித்​திருந்த நிலையில், 2022இல் இந்த எண்ணிக்கை மேலும் 6% உயர்ந்தது.

2018 முதல் 2022 வரையிலான காலக்​கட்​டத்தை எடுத்​துக்​கொண்​டால், 2022இல் அதிகபட்சமாக 1.71 லட்சம் தற்கொலைகள் நடந்துள்ளன; அதாவது 1,00,000 பேரில் 12.4 பேர் தற்கொலை செய்து​கொண்​ட​தாகப் புள்ளி​விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் தற்கொலை தொடர்​பாகப் பதிவுசெய்​யப்பட்ட விகிதங்​களில் இதுவே அதிகம்.

2022இல் நடந்த தற்கொலைகளிலும் 35% பேர் 18-30 வயதுடைய​வர்கள், 32% பேர் 30 முதல் 45 வயதுடைய​வர்கள். அந்த வகையில், நாட்டில் நடக்கும் 67% தற்கொலைகளில் 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் நிகழ்கின்றது. உலகளவில் சாலை விபத்து​களால்தான் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்​கின்​றனர்.

ஆனால், இந்தியாவில் இளைஞர்கள் உயிரிழப்பில் தற்கொலை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 8 நிமிடத்​துக்கு ஓர் இளைஞர் தற்கொலை செய்து​கொள்​கிறார். இளைஞர்​களிடம் அதிகரித்து​வரும் தற்கொலை மனநிலை இந்தியச் சமூகத்​துக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்​கப்​படு​கிறது. பெண்களுடன் ஒப்பிடு​கையில், ஆண்களே அதிகளவு தற்கொலை செய்து​கொள்​கின்​றனர்.

மாநிலங்கள் நிலவரம்: 2022 நிலவரப்படி, இந்தியாவில் அதிகமாக சிக்கிம் மாநிலத்தில் தற்கொலை விகிதம் 43.1% ஆகப் பதிவாகி​யுள்ளது. சிக்கிமைத் தொடர்ந்து அந்தமான் நிகோபார் தீவுகள் (42.8%), புதுவை (29.7%), கேரளம் (28.5%), சத்தீஸ்கர் (28.25%), தெலங்கானா (26.3%), தமிழ்நாடு (25.9%), கர்நாடகம் (20.2%), கோவா (19.2%), மகாராஷ்டிரம் (18.1%) ஆகிய மாநிலங்கள் இப்பட்​டியலில் உள்ளன. தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை​யின்படி, 2021 - 2022 ஆண்டு​களில் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணி​களாகக் குடும்பப் பிரச்சினை, மனஅழுத்தம், திருமணம் - வரதட்​சிணைப் பிரச்சினைகள், மது - போதைப் பொருள் பழக்கம், கடன் - வேலையின்மை ஆகியவை உள்ளன.

சமீப ஆண்டு​களில் பெண்களின் தற்கொலைக்கு, வேலையின்மை முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது: வேலையில்லாத பெண்களின் தற்கொலை விகிதம் 1,00,000 பேருக்கு 94.8 ஆக உள்ளது என ஆய்வுகள் குறிப்​பிடு​கின்றன.

பாதிப்​புக்கு உள்ளாகும் மாணவர்கள்: கடந்த 10 ஆண்டு​களில் மாணவர்கள் சார்ந்த தற்கொலை இரண்டு மடங்காகி​யுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. மாணவர் தற்கொலை செய்து​கொள்ளும் எண்ணிக்கை 2012இல் 4.91% ஆக இருந்தது. 2022இல் இந்த எண்ணிக்கை 7.63% ஆக உள்ளது. 2022இல் மட்டும் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்து​கொண்​டுள்​ளனர். மகாராஷ்டிரம், தமிழ்​நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் மாணவர்​களின் தற்கொலைகள் அதிகம் பதிவாகி​யுள்ளன.

மாணவர்கள் தற்கொலை அதிகம் நிகழ்கிற, பயிற்சி மையங்களை அதிகம் கொண்டுள்ள கோட்டா என்கிற ஊர் அமைந்துள்ள ராஜஸ்தான் இப்பட்​டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. ஒருவருக்​கொருவர் விட்டுக்​கொடுக்​காமல் போட்டி​போடும் மனப்பான்மையை மாணவர்​களிடம் வளர்ப்​ப​தற்கு மாறாக, அவர்களின் தனித்​திறன்களை வளர்க்க இந்தியக் கல்வி நிறுவனங்கள் முக்கி​யத்துவம் அளிக்க வேண்டும்; இதன் மூலம் மாணவர்கள் மீதான அழுத்தம் குறையும் எனச் சமூகச் செயற்​பாட்​டாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

சட்டம் என்ன கூறுகிறது? - மனநல சுகாதாரச் சட்டம் - 2017 ஆனது, எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் குடிமக்கள் அனைவருக்கும் மனநலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை அளிப்​பதுடன் பாலினம், சாதி, மத பேதம் இல்லாமல் நல்ல தரத்துடன் சிகிச்சை அளிப்​ப​தையும் உறுதிப்​படுத்து​கிறது. எனினும், மனநல ஆரோக்​கியம் சார்ந்த நடவடிக்கை​களில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடு​கையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.

இதைச் சுட்டிக்​காட்​டியே, தேசிய மனநலத் திட்டத்​தின்கீழ் மேற்கொள்​ளப்​பட்டு வரும் தற்போதைய தற்கொலைத் தடுப்பு முயற்சிகள் பரவலாக்​கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்​றனர். தற்கொலையைத் தூண்டும் சமூக-பொருளாதார அழுத்​தங்​களைக் களைந்து, தனிநபர்​களின் நெருக்​கடியைக் குறைப்​ப​தற்கான நடவடிக்கை​களில் அரசு இறங்க வேண்டும். தற்கொலைத் தடுப்​புக்கான உதவி எண்களை அதிகரிப்​பதுடன், தற்கொலை எண்ணங்​களால் பாதிக்​கப்பட்ட ஒருவரை முன்கூட்டியே அடையாளம் காணும் விழிப்பு​ணர்வை மக்களிடம் வளர்த்​தெடுக்க வேண்டும்.

மேலும், தற்கொலை செய்து​கொள்ளப் பயன்படுத்​தப்​படும் பொருள்கள் எளிமை​யாகக் கிடைப்​பதைத் தடுப்​ப​தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, தற்கொலை குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் அதற்கான நெறிமுறை​களைப் பின்பற்ற வேண்டும். தற்கொலை எண்ணத்​துடன் இருப்பவரை அம்முடிவை நோக்கித் தள்ளும் வகையில் ஊடகங்​களின் செய்திகள் இருக்கக்
கூடாது.

உணர்வுகளை வெளிப்​படுத்துவது, உறவுகளைக் கையாள்வது, பள்ளி, கல்லூரிக் காலங்​களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன்கள் போன்ற​வற்றை இளம்பரு​வத்​தினர் வளர்த்​துக்​கொள்ள வேண்டும். அதற்கு, குடும்ப – கல்வி அமைப்புகள் தங்களை மாற்றத்​துக்கு உள்படுத்​திக்​கொள்ள முன்வர வேண்டும். மனநலனுக்காக உதவி பெறுவதை இயல்பான​தாகப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்​தெடுத்து, மனநல ஆதரவு ஒரு சலுகையாக இல்லாமல், அனைவரும் எளிதில் அணுகக்​கூடியதாக இருக்கும் சூழல் இந்தியாவில் உருவாக்​கப்பட வேண்டும்.

தற்கொலை எண்ணத்​திலிருந்து மீள்வதற்குத் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவ உதவி எண் 104, சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்​பு ​கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x