Last Updated : 09 Apr, 2025 08:18 AM

 

Published : 09 Apr 2025 08:18 AM
Last Updated : 09 Apr 2025 08:18 AM

நீதிபதிகளின் சொத்து விவரம்... மக்களின் நம்பிக்கை கூடட்டும்!

டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்​டில் தீவிபத்து நடந்​த​போது, தீயை அணைக்​கச் சென்ற வீரர்​கள் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து கொண்​டிருப்​பதை பார்த்து வீடியோ எடுத்து தலைமை நீதிப​தி​யின் கவனத்​துக்கு கொண்டு சென்​றனர். இச்​சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்ச்சி அலைகளை ஏற்​படுத்​தி​யதுடன், நீதிப​தி​களின் சொத்​துகள் குறித்து பொது​மக்​கள் விவா​திக்​கும் நிலையை ஏற்​படுத்​தி​யது.

உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களின் சொத்து விவரங்​கள் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்​காக வெளி​யிடப்​படு​கிறது. ஆனால், உச்ச நீதி​மன்​றம் மற்​றும் 25 உயர் நீதி​மன்​றங்​களில் பணி​யாற்​றும் 769 நீதிப​தி​களில் 95 பேர் மட்​டுமே தங்​கள் சொத்து விவரங்​களை இணைய தளத்​தில் வெளி​யிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. மொத்த எண்​ணிக்​கை​யில் இது வெறும் 12.35 சதவீதம் மட்​டுமே!

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் 33 பேரில் தலைமை நீதிபதி சஞ்​சீவ் கண்ணா உள்​ளிட்ட 30 பேர் தங்​கள் சொத்து விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளனர். கடந்த 1-ம் தேதி நடந்த அனைத்து நீதிப​தி​கள் அடங்​கிய கூட்​டத்​தில் 33 நீதிப​தி​களும் தங்​கள் சொத்து விவரங்​களை வெளி​யிட ஒப்​புக்​கொண்ட செய்தி ஆறு​தல் அளிக்​கிறது.

ஆனால், உயர் நீதி​மன்​றங்​களை பொறுத்​தமட்​டில், சொத்து விவரங்​களை வெளி​யிட்ட நீதிப​தி​களின் எண்​ணிக்கை குறிப்​பிடத்​தக்க எண்​ணிக்​கை​யில் இல்​லை. சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் 65 பேரில் 5 பேர் மட்​டுமே சொத்து விவரங்​களை வெளி​யிட்​டிருப்​பது வெளிப்​படைத்​தன்​மையை மேலும் அதி​கரிக்க வேண்​டியதன் அவசி​யத்தை உணர்த்​துகிறது.

நீதிப​தி​கள் தங்​கள் சொத்து விவரங்​களை பகிரங்​க​மாக அறிவிக்க வேண்​டும் என்ற முடிவு, கடந்த 1997-ம் ஆண்டு மே 7-ம் தேதி அப்​போதைய உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்​.வர்மா தலை​மை​யில் நடந்த அனைத்து நீதிப​தி​கள் அடங்​கிய கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்​ட​தாகும். நீதிப​தி​களாக பொறுப்​பேற்​பவர்​கள் பொறுப்​பேற்​றபின் நியாய​மான கால அவகாசத்​துக்​குள் சொத்​து, முதலீடு உள்​ளிட்ட விவரங்​களை இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்​டும் என்று அறிவிக்​கப்​பட்​டது. சொத்து விவரங்​களை மட்​டுமின்​றி, நீதிப​தி​கள் என்​னென்ன ஒழுக்க நெறிகளை பின்​பற்ற வேண்​டும் என்ற பட்​டியலும் அப்​போது வழங்​கப்​பட்​டது.

நாட்​டில் நீதித்​துறை பாரபட்​சமின்​றி, அப்​பழுக்​கற்ற முறை​யில் நீதிபரி​பாலனம் செய்​கிறது என்​பதை மக்​கள் மன்​றத்​தின் முன்​பாக நிரூபிப்​ப​தற்​காக இது​போன்ற ஒழுக்க நெறிகளை அப்​போதைய நீதிப​தி​கள் வகுத்​துக் கொடுத்​தனர். அந்த ஒழுக்க நெறிகள் செம்​மை​யாக அமல்​படுத்​தப்​படு​கிறதா என்​பதை கண்​காணிக்க வேண்​டியது இன்​றைய கால​கட்​டத்​தின் அவசி​யம் ஆகிறது.

மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​படும் நாடாளு​மன்ற மற்​றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர் பதவிக்​கு போட்​டி​யிடும் ஒவ்​வொரு​வரும் தங்​கள் சொத்​துப் பட்​டியலை அளிப்​பது எத்​தனை அவசி​யமோ, அது​போல​வே​தான் மக்​களின் நம்​பிக்​கைக்கு பாத்​திர​மான நீதிப​தி​கள், பதவி​யில் அமரும்​போதே அவர்​களது சொத்​துப் பட்​டியலை நீதித்​துறை பெற்று பொது​வெளி​யில் வைக்​கவேண்​டும்!

இந்த வெளிப்​படைத்​தன்மை கீழமை நீதி​மன்​றங்​களுக்​கும் விஸ்​தரிக்​கப்பட வேண்​டும். தங்​களின் துன்​பங்​களுக்கு இறு​தித் தீர்​வாக மக்​கள் எண்​ணி​யிருக்​கும் நீதித்​துறை, அந்த மக்​களின் நம்​பிக்​கையை மென்​மேலும் பெற்​றுச்​ சிறப்​ப​தற்​கு இது​வும்​ ஒரு நல்​ல வழி​முறை​யாக அமை​யும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x