Published : 30 Mar 2025 08:54 AM
Last Updated : 30 Mar 2025 08:54 AM

ப்ரீமியம்
ராவணனுக்காகக் கம்பர் சொன்ன இரணியன் கதை

எழுத்தாளர் சா.கந்தசாமி ராமாயணக் கதாபாத்திரமான இரணியன் கதையை அடிக்கருத்தாகக் கொண்டு ‘இரணிய வதம்’ சிறுகதையை எழுதியிருக்கிறார். ‘இரணிய வதம்’ சிறுகதைக்குத் தொன்மத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளவில்லை அவர். ‘தான்’ எனும் ஆணவம் ஒரு மனிதனின் அழிவுக்குக் காரணமாக இருப்பதை அடிக்கருத்தாக இக்கதை உள்வாங்கிக் கொண்டுள்ளது.

தொன்மக் கதையின்படி இரணியன் அசுரர்களின் தலைவன். இரணியன் ஆணவம் மிகுந்தவன்; இறைவனை மதிக்காதவன். தனக்கும் மேலே ஆற்றல் நிரம்பிய தெய்வம் ஒன்று உண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவன். சிவபெருமானிடம் இவன் பெற்ற வரங்களே இவனது ஆணவத்திற்குக் காரணமாக அமைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x