Published : 23 Mar 2025 09:58 AM
Last Updated : 23 Mar 2025 09:58 AM
தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தில் பணியிலிருந்த கருவியிசைக் கலைஞர்கள், ‘உவச்சர்’ என்ற பொதுச்சொல்லால் அழைக்கப்பட்டனர். ராஜகேசரிவர்மரின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட திருச்செங்கோடு செப்பேடு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்க்கு நிலமளிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்தப் பஞ்சமாசப்தம் எனும் தொடர் தோல், காற்று, நரம்பு, கஞ்சக்கருவிகளின் ஒலியுடன் குரலொலியும் இணைந்த ஐந்தொலிக்கூட்டைக் குறிப்பதாக அகராதிகள் பொருள் தருகின்றன. இத்தகு ஐந்தொலிக்கூட்டு மிகக் சில கோயில்களிலேயே வழக்கிலிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT