Published : 02 Mar 2025 07:24 AM
Last Updated : 02 Mar 2025 07:24 AM
தொன்மக் கதாபாத்திரங்களுள் மிக முக்கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்தோறும் அகலிகையின் கதை மீள் வாசிப்புச் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அகலிகையின் கதையை வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்டங்களாகப் பிரித்து விரிவாக எழுதியிருக்கிறார். அகலிகையை மணந்துகொள்ள நடைபெற்ற போட்டியில் இந்திரன் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்படுகிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அகலிகையைப் பாலியல் வன்முறை செய்கிறான். ‘நீ மனதால் கற்பிழக்கவில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்காகச் சில காலம் கல்லாக இருக்கட்டும்
என்று முடிவெடுக்கிறார். இவ்வாறு காலந்தோறும் அகலிகையின் வரலாற்றின்மீது புனைவுத் தன்மைகள் கூடிக்கொண்டே சென்றிருப்பதை அவதானிக்க இயல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT