Published : 02 Mar 2025 07:02 AM
Last Updated : 02 Mar 2025 07:02 AM

ப்ரீமியம்
தமிழ்ச் சிந்தனை மரபில் ஒரு சுதேசி

பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்​டாய்​வு​களில் எல்லை​யில்​லாச் சுதேசி​யத்​தைத் தேடிய​வர். அவர் முன்னெடுத்த ஆய்வு முறை​களும் பல்துறை சார்ந்த நுண்ணாய்​வும், அவற்றின் வழி கண்டடைந்த வீச்​சுகளும் மிகவும் தனித்து​வ​மானவை. எந்த மேலைக் கோட்​பாடு​களி​லும் சிக்​கிக் கொள்​ளாமல் மண் சார்ந்​தும் மக்கள் சார்ந்​தும் பேருண்​மை​களைக் காட்​டிய​வர். தமிழியம் சார்ந்த இன்றைய இளம் தலைமுறை ஆய்வாளர் ஒவ்வொரு​வரும் தொ.ப.வை உள்வாங்க வேண்​டியது அவசி​ய​மாகும். முன்னு​தா​ரணமில்லா ஆய்வாளர் அவர்.
நுண்​பொருள் ஆய்வாளர்: தொ.ப. தமிழ்ப் பண்பாட்​டின் விழுமிய நுட்​பங்​களைப் பேசி​ய​வர். காலங்​களைக் கடந்து புதைந்து கிடக்கும் வேர்களை அலசி ஆராய்ந்​தவர். தமிழ் மரபின் விழுதுகளை விடவும் வேர்​களைத் தோண்டி எடுத்​தவர். இதில் என்ன இருக்​கிறது? சாதாரண விடயம்​தானே! என்று நினைக்​கின்ற​வற்றில் நுட்​பமான கருத்துகளை எடுத்​துக் காட்​டிய​வர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x