Published : 29 Jan 2025 11:23 AM
Last Updated : 29 Jan 2025 11:23 AM

தமிழகத்​தில் மாற்று அரசியல் சாத்​தி​யமா?

தமிழகத்​தில் மாற்று அரசி​யலுக்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி - மிகப் பொருத்​தமான களம். முற்றி​லும் மாநகர பகுதி அல்லது முழு கிராம பகுதியை உள்ளடக்கிய தொகுதி மாற்று அரசி​யலுக்கு சரியான களமாக இருக்க இயலாது. நகர, கிராம பகுதிகள் இணைந்த ஈரோடு கிழக்கு, புதிய முயற்சி​களுக்கு கச்சித​மாய் பொருந்​தும்.

அதிலும், இடைத்​தேர்தல் என்பது மாற்று அரசியல் முன்னெடுப்​புக்கு கூடுதல் ஆதாயம். இந்த நிலை​மையை மேலும் சாதக​மாக்க, வலிமை சேர்க்க, நேரடி இரு முனைப் போட்டி அடித்​தளமாக உள்ளது. இந்த வகையில் ஈரோடு கிழக்கு வாக்​காளர்கள் முக்​கி​யத்துவம் பெறுகின்​றனர். அதற்கு முன், ‘மாற்று அரசி​யல்’ சாத்​தி​யமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்​தின் அடிப்​படை கட்டு​மானத்தை யாராலும் எப்போதும் மாற்ற இயலாது. கேசவானந்த பாரதி வழக்கு தொடங்கி பல வழக்​கு​களில் பல நேரங்​களில் உச்ச நீதி​மன்றம் இதனை மிகத் தெளிவாகக் கூறி​யுள்​ளது. சாசனத்​தின்படி நாடாளு​மன்ற ஜனநாயகம் வரையறைக்கு உட்பட்டு​தான் மாற்று அரசியல் எதுவும் செயல்பட முடி​யும். நாட்​டின் ஒட்டுமொத்த அமைதி, வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்​தன்​மைக்கு இந்த ஏற்பாடு மிகவும் அவசி​யம்.

அப்படி​யானால், நாடாளு​மன்ற ஜனநாயக நடைமுறை​யில் மாற்று அரசி​யலுக்கு இடமில்​லையா? மிக நிச்​சயமாக இருக்​கிறது. என்ன ஒன்று... அதற்கு பெரும்​பான்மை மக்களின் ஆதரவு வேண்​டும். ஆனால், ஆட்சி அதிகாரம் எப்போதும் மாற்று அரசி​யலுக்கு எதிராகவே உள்ளது. அதனால்​தான் அதிகார அத்து​மீறல்களை எதிர்த்து மக்கள் ஆதரவைப் பெற மாற்று அரசி​யல்​வா​திகள் மிகக் கடுமையாக போராட வேண்டி உள்ளது.

புதிய முயற்சி​கள், நல்ல மாற்​றங்​கள், மாற்று சிந்​தனை​களுக்கு நம் நாட்​டில் அத்தனை எளிதில் அங்கீ​காரம், ஆதரவு கிடைத்து விடு​வ​தில்லை. பெரிய அரசியல் கட்சிகளின் பிடி​யில் தேர்தல் களம் சிக்​கிக் கொண்​டுள்​ளது. இது, நமது ஜனநாயகத்​தின் ஆகப் பெரும் சோகம்.

கடந்த 1977-ல் ஜெயபிர​காஷ் நாராயண் தலைமை​யில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம​ரானார். எனினும், அதை முற்றி​லும் மாற்று அரசியல் என்று சொல்​லிவிட இயலாது. ஒரு தூய காந்​தி​ய​வா​தியாக பிரதமர் மொரார்ஜி தேசாய், அதிகாரக் குவியல், அதிகார முறை​கேடு, ஊழல் மற்றும் அரசியல் ஆதாயங்​களுக்கு அப்பால் தனது பதவியை நிலை நிறுத்தினார்.

ஜவர்கலால் நேரு​வின் பொருளா​தாரக் கொள்கை, இந்திரா காந்​தி​யின் சோசலிச நடவடிக்கை, அறிவியல் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ராஜீவ் காட்டிய ஆர்வம், நரசிம்​ம​ராவ் வகுத்த புதிய பொருளா​தாரக் கொள்கை, வாஜ்பாய் ஏற்படுத்திய உட்கட்​டமைப்பு வசதிகள் எல்லாமே ஒரு வகையில், அரசு நிர்​வாகத்​தில் மாற்று அரசி​யலின் வெவ்​வேறு பரிமாணங்​கள்​தான்.

தமிழ்​நாட்​டை பொறுத்த வரை, காமராசரின் கல்வி வளர்ச்சி தொழில் வளர்ச்சி திட்​டங்​கள், சாமானியர்​களுக்கு சங்கடம் தராத எம்ஜிஆர் அரசின் செயல்​பாடு​கள், மகளிருக்கு முக்​கி​யத்துவம் தந்து ஜெயலலிதா அறிமுகப்​படுத்திய பல்வேறு நலத் திட்​டங்கள் எல்லாம் மாற்று அரசியல் என்று கூறமுடி​யா​விட்​டாலும், புதிய முயற்சி​கள், நவீன செயல் திட்​டங்கள் எனலாம். அப்படி​யானால் மாற்று அரசியல் எது? அதிகார மைய அரசியலை அடித்​தட்டு மக்களின் அரசி​யலாக மாற்றுவதே மாற்று அரசி​யல்.

ஆட்சி​யாளர்கள் பின்​னால் மக்கள் செல்வதை மாற்றி மக்களின் பின்​னால் ஆட்சி​யாளர்களை வரவழைப்​பதும் மாற்று அரசி​யல்​தான். எப்போதெல்​லாம் அதிகாரக் குவியல் ஜனநாயகத்​தின் குரல் வளையை நசுக்க முற்​படு​கிறதோ அப்போதெல்​லாம் மக்களின் குரலை பாது​காத்து அதிகார வர்க்​கத்தைசரியான திசைக்கு திருப்பு​வதும் மாற்று அரசி​யல்​தான்.

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி, வாக்​காளர் கையில் இருக்​கிறது - தமிழ்​நாட்​டில் மாற்று அரசி​யலின் எதிர்​காலம். எந்த ஓர் இடைத்​தேர்​தலிலும் பிரதான எதிர்க்​கட்சி பங்கேற்றே தீர வேண்​டும். ஆனால், அதிமுக​வின் தேர்தல் புறக்​கணிப்பு - மக்களின் ஜனநாயக உணர்​வுகளை மதிக்காத அலட்​சியப் போக்கையே காட்டு​கிறது.

இன்றுள்ள நிலை​​யில் தமிழகத்​தில் விஜய், சீமான், அண்ணா​மலை, திரு​மாவளவன், அன்புமணி ராமதாஸ் ஆகிய 5 தலைவர்​களும் வெவ்​வேறு கொள்​கைகளை கொண்​ட​வர்​கள். இன்று தமிழக இளைஞர்கள் இவர்கள் பின்​னால் அணிவகுத்து இருக்​கின்​றனர். என்ன காரணம்..?

வெற்று முழக்​கங்​கள், சிறு​பிள்​ளைத்​தனமான அறிவிப்பு​கள், தனிநபர் துதி, அதிகாரக் குவியல் இவற்றுக்கு இளைஞர்கள் மத்தி​யில் ஆதரவு நாளுக்கு நாள் மங்கிக் கொண்டே வருகிறது. இது, தமிழ்​நாட்​டில் ஆரோக்​கியமான அரசியல் மீண்​டும் துளிர்க்​கும் என்ப​தற்கான மிக நல்ல அறிகுறி. ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் முன்​வைக்​கும் வாதங்​கள், சிலருக்கு ஏற்க முடி​யாத​தாய் இருக்​கலாம்.

ஆனால் இவர்கள் முன்​வைக்​கும் எதிர்​வாதம், ஆற்றும் எதிர்​வினை ஆரோக்​கிய​மானதாக இல்லை. தேர்தல் முடி​வில் ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் வெல்லப் போவது யாராக​வும் இருக்​கட்டும்; இப்​போதைக்கு, நாம் தமிழர் சீ​மான் ​முன்​வைக்​கும் ​மாற்று அரசி​யல், மக்​களின் கவனத்தை கணிசமாக ஈர்த்​துள்ள​தாகவே தெரி​கிறது.

சீ​மானின் பார்​வை​யில் இன்றைய சூழலை இப்படி சொல்​லலாம்​: ​மாற்​று அரசி​யல்​ - ஏ​மாற்​று அரசி​யல்​ ஆகிய இரண்​டில்​, மக்​கள்​ ​யார்​ பக்​கம்​ நிற்​கப்​ போகிறார்​கள்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x