Published : 03 Dec 2022 06:53 AM
Last Updated : 03 Dec 2022 06:53 AM

ப்ரீமியம்
நூல் வெளி: திருக்குறள் ஆய்வுகளில் புதிய திருப்பம்

கே.தியாகராஜன் 

திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை 1886இல் ஜி.யூ.போப் வெளியிட்டார். அதற்குப் பின்னிணைப்பாக 75 பக்கங்களில் ‘Concordance and Lexicon of the Kural and Naladiyar’ என்பதையும் சேர்த்தார். 1,330 குறட்பாக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் பட்டியல் அதனுள் அடங்கும். அச்சொற்களின் இலக்கணக் கூறுகள், முன்னும் பின்னும் வரும் சொல் ஒட்டுகள் (affixes), ஓரிரு கூட்டாளி-சொற்கள் மற்றும் குறுகிய சொற்பொருள்கள் ஆகியவற்றை அப்பட்டியல் மையப்படுத்துகிறது.

வள்ளுவர் கையாண்ட தமிழ்மொழி சார்ந்த துல்லியமான தகவல்களைத் தரும் அப்பகுதியைத் திருக்குறளின் முதல் தமிழ்ச் சொல்லடைவு நூல் என்று கருதலாம். போப் தொடங்கிவைத்த பாரம்பரியத்தின் வழியில் வேலாயுதம் பிள்ளை (1954), ந.சி.கந்தையா பிள்ளை (1961), இந்தோலஜி பிரஞ்சு மையம் (1967), செல்லமுத்து & பாஸ்கரன் (1986), பாண்டியராஜா (2014), தமிழ் இணையக் கல்விக் கழகம் எனப் பல பெயர்களில் திருக்குறள் சொல்லடைவு நூல்கள் வெளிவந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x