Published : 08 Oct 2022 07:01 AM
Last Updated : 08 Oct 2022 07:01 AM

ப்ரீமியம்
உயிர்த்தெழும் உண்மைகள்

ஜெ.சுடர்விழி,

ஸ்டாலின் ராஜாங்கத்தின் புதிய நூல் ‘பண்பாட்டின் பலகணி’ அடியாழத்தில் புதைந்துள்ள உள்மெய் தோண்டி எடுத்துக்காட்டும் மாயத்தைச் செய்திருக்கிறது. சாவுச் சடங்குகள் எனப்படும் நீத்தார் சடங்குகளே நம்முடைய ஆதி வழிபாடுகளாக இருந்திருக்கின்றன என்று கூறும் ஆசிரியர், நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளின், திருவிழாக்களின் அடியோட்டமாக இத்தகைய சடங்குகளே இருந்திருக்கும் என்கிற கருதுகோளின் அடிப்படையில் நிகழ்த்திய உரையாடல்களும் கள ஆய்வுகளுமே இந்நூலின் கட்டுரைகளாக உருப்பெற்றிருக்கின்றன. ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, தீபம், தீபாவளி, மாவலி அமாவாசை, போகி, பொங்கல், மாசிக்களரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களை எடுத்துக்கொண்டு அவற்றை நினைவுகூர்வதற்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் வைதீகக் கதையாடல்களின் பொருத்தமின்மையையும் இந்நாட்களில் பின்பற்றப்படும் சடங்குகளில் தொழிற்படும் நீத்தார் சடங்குகளின் பொருத்தப்பாட்டையும் விவாதிக்கும் இக்கட்டுரைகள், பண்பாட்டாய்வில் புதிய குரல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x