Published : 02 Jul 2022 07:00 AM
Last Updated : 02 Jul 2022 07:00 AM
சமகாலத் தமிழின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரான கண்டராதித்தனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘பாடி கூடாரம்’, இளம் படைப்பாளி முத்துராசா குமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘ஈத்து’ ஆகிய இரண்டுக்கும் மயிலாடுதுறையில் வரும் ஞாயிறு அன்று நூல் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரி விசாகனும் செந்தில் ஜெகன்நாதனும் நூல்களைப் பற்றி உரையாற்றுகிறார்கள். கண்டராதித்தனும் முத்துராசா குமாரும் ஏற்புரை ஆற்றவிருக்கிறார்கள். இந்த நிகழ்வை மயிலாடுதுறையின் வாகை இலக்கியக் கூடல் ஏற்பாடு செய்திருக்கிறது. இடம்: வருவாய் அலுவலர் சங்க (ROA) கட்டிடம், சின்னக் கடைத்தெரு, மயிலாடுதுறை. நேரம்: காலை 10 மணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT