Published : 15 Nov 2025 07:10 AM
Last Updated : 15 Nov 2025 07:10 AM

ப்ரீமியம்
அபூர்வ மனிதர்களின் நினைவுகள் | நூல் நயம்

நிலா மகனின் முதல் முயற்சியான இத்தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. வீட்டு மனிதர்களின் உறவுகளில் தொடங்கி, வெளியே செல்லும் பயணங்களில் எதிர்பாராமல் சந்திப்பவர்கள் வரை, மானுட தரிசனத்தைக் கண்டடைவதை நிலா மகனின் கதைகளில் காண முடிகிறது. ​

காதல் சிறகிழந்து வாடிக்​கொண்​டிருக்​கும் தந்​தையை அலட்​சி​யப் படுத்​தி​விட்​டோமே என்ற தவிப்​பைப் பேசும் ‘காளி​தாசும் கண்​ண​தாசும்’, ரயில் பயணத்​தில், ஒரு முதி​ய​வர் தனது இறு​தியை நெருங்​கும் அறிகுறிகளோடு பழகும் பண்​பான நிமிடங்​களைச் சொல்​லும் ‘கற்​பகத்​தின் ராஜாங்​கம்’, தைப்​பூச நடைபயண யாத்​திரை​யின்​போது, உடன் வரும் ஒரு பெண், தான் இலங்​கையி​லிருந்து நாடு​ விட்டு நாடு வந்​து, பிழைப்​பு தேடிய அவலங்​களைச் சொல்லி உடன்​வந்​தவர்​களை அதிர வைக்​கும் ‘அளவி’ போன்ற கதைகள், நல்ல சிறுகதைகளாக உள்ளன. இவரது முதல் முயற்சி​யிலேயே வடிவம்கூடிவந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x