Last Updated : 25 Oct, 2025 06:53 AM

1  

Published : 25 Oct 2025 06:53 AM
Last Updated : 25 Oct 2025 06:53 AM

ப்ரீமியம்
மீண்டெழும் இயற்கை சார்ந்த வாழ்வின் கதை | நூல் வெளி

நல்ல புத்தகங்களை குறைந்த விலையில் தரமாக சில பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவ்வரிசையில், Cotton candy books பதிப்பகம், ஜாக் லண்டனின் மிகச்சிறந்த நாவலான 'கானகத்தின் குரல்' நூலை மக்கள் பதிப்பாக ரூ.50க்கு வெளியிட்டுள்ளது. தமிழில் பெ.தூரன் மொழிபெயர்த்துள்ள, 120 பக்கங்கள் கொண்ட இந்நூல், குறுகிய காலத்திலேயே 2000 படிகள் விற்றுத் தீர்ந்துள்ளது.

பிரபஞ்சன் தனது அமெரிக்க பயணத்தில் ஜாக் லண்டனின் நினைவில்லத்தைச் தேடிச் சென்று, கல்லறையைப் பார்க்க மட்டுமே வாய்ப்பு கிடைத்ததைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஜாக் லண்டன் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளத்தில் விரிவாக ஆற்றிய உரையும், சமூக வலைதளத்தில் பதிவு செய்த கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. புதுமைப்பித்தன், பெ.தூரன், நா.ஜெகந்நாதன், லதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மொழியாக்கத்தில் ஜாக் லண்டன் கதைகள் தமிழில் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x