Published : 18 Oct 2025 06:59 AM
Last Updated : 18 Oct 2025 06:59 AM

ப்ரீமியம்
வன்முறை உண்டாக்கும் அச்சம் | நூல் வெளி

தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்​பு​கள் சமீப​கால​மாக அதி​கரித்​திருக்கின்​றன. பல்​வேறு நாடு​களின் சிறுகதைகள், நாவல்கள், கட்​டுரைகள் என வரு​வதைப் போல மலை​யாளம், கன்​னடம், வங்​கமொழி உள்​ளிட்ட இந்​திய மொழி இலக்​கி​யங்​களும் அதி​க​மாகவே மொழி பெயர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. இதில் சாகித்ய அகாதமி சமீபத்​தில் வெளி​யிட்​டிருக்​கிற மொழி பெயர்ப்பு நூல்​களில் ஒன்​று, ‘ஒரு பெண்​மானின் கண் - மேலும் பிற கதைகள்’ எனும் பஞ்​சாபி சிறுகதைகள் தொகுப்பு.

'பஞ்​சாபின் செக்​காவ்' எனப்​படும் எழுத்​தாளர் மோஹன் பண்​டாரி எழு​தி​யுள்ள கதைகள் இவை. சாகித்ய அகாதமி உள்பட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள அவரின் அழுத்​த​மான ஏழு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது என்​றாலும், ஒவ்​வொரு கதை​யும் அதன் உள்​ளடக்​கம், கதைபேசும் பொருள், அதன் போக்கு என அனைத்​தி​லும் ஒரு நாவலுக்​கான அடர்த்தி யையும் விஷ​யங்​களை​யும் கொண்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x