Published : 18 Oct 2025 06:52 AM
Last Updated : 18 Oct 2025 06:52 AM
காந்தியச் சிந்தனையாளரும் சமூகத் தத்துவவியலாளருமான தரம்பால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் செயல்பாடு குறித்து நீண்ட கால ஆய்வில் ஈடுபட்டவர். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகே இந்தியாவின் வரலாறு பேசப்படுவதாகச் சொல்லும் இவர், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக – சிலவற்றில் மேற்கத்திய நாடுகளையே விஞ்சக்கூடிய வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்று உறுதிபடஉரைக்கிறார்.
40 ஆண்டுகளாக இவர் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய கட்டுரைகள், அளித்த நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பே ‘இந்தி யாவைக் கண்டடைதல்’ எனும் நூல். 2003இல் வெளியான இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த் திருக்கிறார் தர் திருச்செந்துறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT