Published : 06 Sep 2025 07:16 AM
Last Updated : 06 Sep 2025 07:16 AM

ப்ரீமியம்
‘பட்டியல் வடிவில் ஒரு (பொது) வாழ்க்கை வரலாறு’ முதல் ‘மணிரத்னம் சினிமா: மாற்றுப் பார்வை’ வரை | நூல் வரிசை

பட்​டியல் வடிவி​லான தரவு​களை மட்​டுமே கொண்​டுள்ள இந்த நூல் தமிழில் அரி​தான முயற்​சி. கற்​பித்​தல், கல்வி நிறு​வனங்​களில் முக்​கிய​மான பொறுப்​பு​களை வகித்​தல், சொற்​பொழி​வு, நூல் எழுதுதல், பல்​வேறு அமைப்​பு​கள் மூலம் செயல்​படு​தல் எனத் தமது வாழ்​வைத் தமிழர்​களின் மேன்​மைக்​காகவே அமைத்​துக்​கொண்​ட​வர் காலஞ்​சென்ற க.ப. அறவாணன். அவரின் 50 ஆண்​டுத் தமிழ்த்​தொண்​டு​கள் இந்​நூலில் தொகுக்​கப்​பட்​டுள்​ளன.

1967லிலிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்​கும் அறவாணன் செய்த பணி​களைப் பற்​றிய விசால​மான பார்​வையை இத்​தொகுப்பு அளிக்​கிறது. அவர் எழு​திய கட்​டுரைகள், அவை வெளி​யான இதழ்​கள், அவரது சொற்​பொழி​வு​களின் தலைப்​பு​கள், அவை நிகழ்ந்த இடங்​கள், ஏற்​பாடு செய்த அமைப்​பு​கள், அவரது வானொலி உரைகள் ஒலிபரப்​பான நாள், நேரம் உள்​ளிட்ட தரவு​களைக் காண்​கை​யில் அறவாணன் என்​கிற ஆளுமை மீது நமக்​குக் கூடு​தல் மரி​யாதை தோன்​றுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x